
விதைகள் புதைந்திருக்கும்
நிலமெப்போதும்
வெம்புவதில்லை
திசையெங்கும்
வேர்கள் கிளைத்துக்
கிழிக்கும்போதும்
வருந்துவதில்லை
விருட்சம்
வசந்தத்தின் வனப்பில்
தன் நிலை மறக்கையில்
புலம்புவதில்லை நிலம்
புயலோ, மழையோ,
இடியோ, வெயிலோ
எம்மாற்றமும் இன்றி
எப்போதும்போல்
விருட்சத்தைத்
தாங்கியபடியே
பின்னொரு நாளில்
விருட்சம் வீழும்போதும்
வேர்க்ளைத் தன்னுள்ளே
புதைக்கும் நிலம்
எப்போதும் அழுவதுமில்லை.

7 பேரு பாராட்டியிருக்காங்க:
மிகவும் அருமை
good one!
//விருட்சம் வீழும்போதும்
வேர்க்ளைத் தன்னுள்ளே
புதைக்கும் நிலம்
எப்போதும் அழுவதுமில்லை//
நச், நச், நச், ச், ச், ச், ச்,
ஆழ்ந்த அர்த்தம் செரிந்த கவிதை..
பிடித்திருகிறது அண்ணாச்சி,
Nice! :-)
//பின்னொரு நாளில்
விருட்சம் வீழும்போதும்
வேர்க்ளைத் தன்னுள்ளே
புதைக்கும் நிலம்
எப்போதும் அழுவதுமில்லை. //
மாறாக நிறைகிறது.
இல்லையா வேலன்?
ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா!
நல்லாயிருக்கு சார்..
இன்னும் கூட கொஞ்சம் எழுதியிருக்கலாம்.
Post a Comment