
பின் நவீனத்துவ, இருத்தலியல், கட்டுடைத்தல் போன்ற கோட்பாடுகளும் இன்ன பிற ஜல்லியடித்தலும் ஏதுமில்லாத தெளிந்த நீரோட்ட எழுத்து நடையில் கதை எழுதியவர் கந்தர்வன். அவரது கதைகளில் அதிகமும் மண்ணின் மணமும் வேர்வை வீச்சமும் கலந்திருக்கும்.
கஞ்சி என்ற ஒற்றைவார்த்தை தவிர வேறெதுவும் பேசாத பைத்தியக்கரனைப் பற்றி(சீவன்), தேடித் தேடிச் செடிகள் கொணர்ந்து வீட்டில் வைத்து வளர்க்கும் ஆசை பற்றி (பூவுக்குக் கீழே), நுகர்வோர் கலாச்சாரப் பிடியில் சிக்கிக் சீரழிவதைப் பற்றி(அடுத்தது), திருமணச் செலவைக் கட்டுப் படுத்த கண்டுகொண்ட தீர்வு பற்றி(மங்கலநாதர்), மரங்களுடனான நெருக்கமும், அவைகள் வெட்டி வீழ்த்தப் படும்போதெழும் துக்கத்தைப் பற்றி(மைதானத்து மரங்கள்), வேலைக்குப் போகும் பெண்கள் படும் சிரமங்கள் பற்றி(இரண்டாவது ஷிஃப்ட்), தனக்குப் பாத்யதை இல்லாத ஆனால் தான் உரிமை கொண்டாடிய பொருள் கைவிட்டுப் போகும்போவது பற்றி(சாசனம்), ஒரு வேலைக்காரன் தோள் துண்டும் படும் அவஸ்தையும் அதனால் அவன் படும் அவஸ்தையும் பற்றி (துண்டு), சிரமப்படு வீடொன்றைக் கட்டி வட்டி கட்ட முடியாமல் அதை வாடகைக்கு விட்டு வேறொரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்க நேர்வது பற்றி(ஒவ்வொரு கல்லாய்), சந்தையில் மாடு வாங்கினால் சரியாக வராது என மந்தையில் மாடு வாங்கிக் காயடிக்கும் கொடுமை பற்றி(கொம்பன்) என முத்தான பத்துக் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறார்எனக்குப் பிரியமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் சீவன் என்ற தலைப்பில்.
முன்னுரையில் தமிழ்ச்செல்வன், “ தீவிர வாசகனுக்குக் கதைகள் வெறும் கதைகளாக மட்டுமே நிற்பதில்லை. சில கதைகள் அவன் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆகி விடுவதுண்டு “
உண்மைதான் மங்கல்நாதர் கதையைப் படித்தபோது என் அம்மா அவர்கள் திருமணம் நடந்ததை ப் பற்றிச் சொல்லுவதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. “ஊரடைக்கப் பந்தல் அஞ்சு வீதியும், 7 நாள் கல்யாணம், பவுன் 15 ரூபாதான், எல்லா விதியிலும் மாட்டு வண்டி நிக்கும், மாடுகளுக்கு தீவனம் போடம் மட்டுமே ஒரு ஆள், வீதில இருக்க எல்லாத் திண்ணையிலும் சாப்பாட்டுப் பந்தி நடந்துட்டே இருக்கும், சாம்பார் வாளிப் பிசுக்கக் கழுவக் கூட நேரமிருக்காது. தவசுப் பிள்ளைகள்(சமையல்காரர்கள்) ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேலை பாத்துட்டே இருந்தாங்க, மாட்டு வண்டிகள்ல காய்கறி வந்து இறங்கிட்டே இருக்கும்”
யோசித்துப் பாருங்கள் இன்றிது சாத்தியமா? அப்படி ஒரு திருமணத்தைத்தான் நடத்துகிறார் தன் முதல் மகளுக்கு மங்கல் நாதர் கதையில் வரும் மாமா. செலவு கட்டுக்கடங்காமல் கை மீறிச் செல்ல, அடுத்த மகள் திருமணத்திற்கு அவர் எடுத்த முடிவு?
”இது கந்தர்வனைப் பற்றிய சிறு அறிமுகத்திற்காகத்தான். இதைப் படித்து மேலும் கந்தர்வனின் கதைகளைத் தேடிப் படிக்க ஆர்வம் ஏற்படுத்தும் ஒரு முயற்சிதான் என்கிறார் ” முன்னுரையில் தமிழ்ச்செல்வன் . முழுத்தொகுப்பு வம்சி வெளியிட்டிருக்கிறார்கள். வாங்க வேண்டும்.
நூல் : சீவன்
வகை : தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
தேர்வு : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை, 044-24332424, 24332924
விலை : ரூ.30
இப்புத்தகத்தை வாசிக்கத் தந்த செல்வேந்திரனுக்குக் கூடுதல் ப்ரியமும் கூடவே நன்றிகளும்.

6 பேரு பாராட்டியிருக்காங்க:
நல்ல பகிர்வு அண்ணாச்சி.
வாசிக்கத்தூண்டுதே உங்களின் பதிவு.
அண்ணாச்சி,
ஜெயமோகன் அண்மையில் கந்தர்வனைப் பற்றி எழுதிய பிறகும், நீங்கள் பேசும்போது குறிப்பிட்டிருந்ததற்குப் பிறகும் நானும் கந்தர்வனின் கொம்பன் தொகுப்பைப் படித்துமுடித்தேன்.
என்னிடம் மிக நீண்ட நாட்களாக இருக்கும் புத்தகம் அது.இவ்வளவு நாள் படிக்காமல் போனததற்காய் வருந்தும் அளவுக்கு இருந்தது.எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அத் தொகுப்பிலுள்ள கொம்பன் கதை மட்டுமே, நீங்கள் வாசித்த தொகுப்பில் இருக்கிறது. அதைப்பற்றிய உங்களின் ஒரு வரிக் கருத்து, உங்களின் தேர்ச்சிக்கு நல்ல சான்று. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். மற்ற கதைகளும் கட்டாயம் படிக்கவேண்டும்.
புதுக்கோட்டையில் உள்ள புதுக்குளத்தின் கரையில் அவரோடு அமர்ந்து அரட்டை அடித்த நாட்கள்...
கவிஞர் நா.முத்துக்குமாரும் அவரும் இரவுகளில் தொலைபேசியில் மணிக்கணக்கில் உரையாடுவார்கள். முத்துக்குமார் புதுகையில் உள்ள கந்தர்வனின் இல்லத்திற்கு வந்தபோது அவரது மனைவி முத்துக்குமாரிடம் கவிஞர்களிடம் ஏர்செல்காரர்கள் பில் வாங்க மாட்ட்டார்களா என்று சிலேடையாக கேட்டது இன்றும் நான் நினைத்து ரசிக்கும் நிகழ்ச்சி.
புதுக்கோட்டை இழந்த கிரீடம் கந்தர்வன் :(
அதான் படித்தாகிவிட்டதே...அப்புறம் வாங்கி எனக்கு அனுப்பவேண்டியதைத்தானே கடைசியில் சொல்கிறீர்கள்...சரி.
இன்னும் தெரிந்துகொள்ளாத இமயங்கள் எத்தனை இருக்கிறதோ.? நன்றி அண்ணாச்சி.
Post a Comment