Sunday, April 26, 2009

மலர்களே மலர்களே

இந்த வீடியோவைப் பார்த்ததும் நான் அடைந்த உன்னதத்தை விவரிக்க வார்த்தைகளில்லை. இந்தச் சின்ன வயதில்(13) இவ்வளவு திறமையா?

ஹரிஹரனும் சித்ராவும் பாடிய இந்தப் பாடலை இவர் ஒருவரே தனியாகப் பாடுவதும் அதையும் சிரித்துக் கொண்டே பாடுவதும் மிக ஆச்சர்யமூட்டுகிறது.







அனகாவின் எல்லா பாடல்களையும் Youtubeல் பார்க்க



.

மும்பை சலோ

மும்பை ஏர்போர்ட்டிலிருந்து அனுஜன்யாவை அழைத்து வீட்டுக்குச் செல்ல வழியும் முகவரியும் கேட்டேன். அவர் வீட்டுத் தொலைபேசி எண்ணைக் கொடுத்து பேசச் சொன்னார். ”ஆட்டோவிற்கு எவ்வளவு கேட்பான்” என்பது உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொண்டேன்.

வெளியே வந்ததும் ஆட்டோக்காரன், “எங்க சார்?”

நான் போக வேண்டிய இடத்தைச் சொன்னதும், “ப்ரீ பெய்டுல 350 ஆகும் சார், நீங்க 250 கொடுங்க போதும்”

நான், “ 100 ரூபாய்க்கு வருவியா?”

“சரி வாங்க”

அரை மணி நேரத்தில் வீடடைந்தேன். அருமையான காபி சாப்பிட்டுக் காத்திருந்தேன் அனுஜன்யாவிற்கு. அனுஜன்யாவின் தங்கமணி நல்ல புத்தகங்களைப் படிக்கிறார்;நல்ல திரைப்படங்களைத் தேடிப் பார்க்கிறார். அனுஜன்யாவின் கவிதைகளைப் பொறுத்துக் கொள்கிறார்.

அவர் வந்தததும் ஆரம்பித்த பேச்சு, இரவு உணவு, நடை, மீண்டும் காபி என நீண்டு நள்ளிரவைக் கடந்தது.


அடுத்த நாளிரவு கேஸ்கேட் என்ற உணவு விடுதியில் இரவு உணவை உண்டோம்.
நல்ல ஆம்பியன்ஸ். பாருடன் இணைந்த உணவு விடுதி. உள்ளே நுழைந்ததும் 6 கடிகாரங்களை வைத்து உலகின் மற்ற முக்கிய நகரங்களில் மணி என்ன என்பதையும் காட்டுகிறார்கள். அனுஜன்யாவிடம் கேட்டேன், “உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுமாறு இந்த கடிகாரங்களை வைத்திருப்பதன் நோக்கம் என்ன? ”

“நேரம் காலம் தெரியாமல் தண்ணி அடிக்கிறாங்கன்னு யாரும் சொல்லக் கூடாதுல்ல அதுக்குத்தான்”

அனுஜன்யாவின் நண்பர் சந்துரு அந்த இரவை நல்ல கலகலப்பாக்கினார். சரளமான பழமொழிகளை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சொல்லி அசரவைத்தார். வெளிநாட்டு வங்கி ஒன்றின் உயரதிகாரியான அவர் உயர்தர ஆங்கிலத்திலிருந்து சட்டென பேச்சுவழக்கிற்கு மாறுவது சுவராசியமாக இருந்தது.

“தட் ஃபெல்லொவ் ஃபெயில்ஸ் டு டிஃபெரென்சியேட், செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன், லெட் ஹிம் ஃபீல் த பின்ச், பட்டாத்தான் புத்தி வரும்”

சர்வர் ஒருவர் வந்து சந்துருவப் பார்த்து, “எக்ஸ்க்யூஸ் மீ, உங்க ஐ டி கார்டக் கொஞ்சம் தர்றீங்களா?”ன்னார்.

சிறிது நேரத்தில் திரும்ப வந்து, “உங்களுக்கு 10% டிஸ்கவுண்ட் இருக்கு சார்” அப்படின்னார். உடனே ரெம்பப் பெருமையா எங்களை பார்த்தார். ஆட்டுக்கு மஞ்சத் தண்ணி தெளிச்சிருக்காங்கன்னு புரியல அவருக்கு, பாவம்.

சாப்பிட்டு முடிச்சதும் பில்ல நேரா அவரிடமே கொடுத்து பேமெண்டும் வாங்கினார் சர்வர்.

இதில் இருந்து இரண்டு விஷயங்கள் எனக்குப் புரிந்தது . ஒண்று சாப்பிடப் போகும்போது ஐடி கார்ட அணியக்கூடாது. இரண்டு சந்துரு என்னோட பதிவுகளப் படிக்கிறது இல்லை. (என்னோட இந்தப் பதிவப் படிச்சிருந்த தப்பிச்சிருப்பாரு)

அடுத்தநாள் காலை மும்பை கார்ப்பரேசன் பேருந்தில் பூனாவிற்குப் பயணம். பேருந்துகளை நல்லவிதமாகப் பராமரிக்கிறார்கள். வால்வோ பேருந்து, குளிர்பதனபடுத்தப்பட்டது. வழியெங்கும் கண்ணுக்கினிய பச்சை பசேலென இயற்கைக் காட்சிகள். அருகிலிருந்தவர் சொன்னார், ”நவம்பர் டிசம்பர்ல வந்தீங்கன்னா அருமையாக இருக்கும்”

சாப்பிட ஒரு இடத்தில் நிறுத்தினார்கள் அனைத்து வசதிகளும் அமைந்த வளாகம். நல்ல சுவையான உணவு, சரியான விலை. நமது ஊரில் சாலை ஓரங்களில் போக்குவரத்து கழகப் பேருந்துகளை வழக்கமாக் நிறுத்துமிடத்தில் புளிச்ச தோசை மாவில் ஊத்தாப்பம் கொடுத்து 35 ரூபாய் வசூலிக்கும் கொடுமை நினைவுக்கு வந்தது. கழிவறைகளையும் சரியாகப் பராமரிக்கிறார்கள். இலவசம்.


மலையைக் குடைந்தமைந்த பாதைகளில் பயணம் செய்தது புதிய அனுபவம். திரும்ப மும்பை வரும்பொழுது வாடிக்கையாளரின் காரில் பயணித்தது மலைப்பாதைகளை நன்கு ரசிக்க உதவியது.

இரவு கிளம்பிய குர்லா எக்ஸ்பிரஸில் சக பயணிகளுடனான அனுபவம் வித்தியாசமாக இருந்தது.

ஆடிட்டர் ஒருவர் தனது மனைவி பையன்(8 ஆம் வகுப்பு), பாலக்காட்டைச் சேர்ந்த பெண்மணி அவரது மகன் (9ஆம் வகுப்பு) ஆகிய இருவரது குழந்தை வளர்ப்பு முறைகளை கவனிக்க முடிந்தது.

ஆடிட்டர் தனது மகன் சுய சிந்தனை உள்ளவனாக வளர வேண்டுமென மெனக்கெடுவது தெரிகிறது. இதைச் சாப்பிடு எனச் சொல்லாமல், இதெல்லாம் கிடைக்கும் உனக்கு என்ன வேண்டுமெனக் கேட்கிறார். அதே போல் உணவு வந்து விட்டதே என்பதற்காகச் சாப்பிடச்சொல்லி வற்புறுத்தவில்லை. உனக்கு எப்பொழுது பசிக்கிறாதோ அப்பொழுது சாப்பிடு எனச் சொல்கிறார். பேண்ட்ரிக்குச் சென்று வேண்டுமென்பதை வாங்கிச் சாப்பிடு எனச் சொல்கிறார். ஒவ்வொரு ஸ்டேசனிலும் கீழே இறங்கி அந்த மக்கள் மற்றும் சுற்றுபுறச் சூழலைக் கவனிக்கச் செய்கிறார்.

மாறாக பா கா பெண்மணி தனது மகனை இன்னும் சிறுவனாக எண்ணிக் கொண்டிருக்கிறார். ஸ்டேசனில் கீழே இறங்க விடுவதில்லை.”ரயில் கிளம்பிடும் நீ ஓடி வந்து ஏற முடியாது” என்கிறார். அவன் என்ன சாபிட வேண்டும்; எப்பொழுது சாப்பிட வேண்டுமென்பதை அவரே முடிவு செய்கிறார். ஒரு முறை பாத் ரூம் சென்றவன் நீண்ட நேரமாகியதால், பாத்ரூம் கதவருகில் சென்று காத்திருந்தார்.

இரண்டாமவன் வளார்ந்து பெரியவனானதும் நிச்சயமாக அவன் மனைவி சொல்வதைக் கேட்பவனாகத்தான் இருப்பான். ஏனெனில் வளர்வது வரை அவனம்மா தீர்மானிக்கிறார். வளர்ந்ததும் அவனது மனைவி. அவனுக்கென்று சுயமாக ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.

என்னுடைய 14 வயதில் நான் வளர்ந்த முறையை நினைத்துப் பார்த்து மிக மகிழ்ந்தேன். பாவம் இந்த பையன் சபிக்கப் பட்டவன் இதே போலத்தான் வெகு பெற்றோர் தங்கள் குழந்தைகளை நடத்துகிறார்கள்.


.

Thursday, April 23, 2009

வார்த்தைகளில் வழியும்



அவசரப் பொழுதொன்றில்
தவறி விழுந்த வார்த்தை
தெறித்துச் சிதறியதில்
எங்கும் ரணம்;
குருதி கொப்பளிக்க.


தடித்தெழுந்த வார்த்தைகளில்
பொதிந்திருந்தது காயப்பட்ட
வலியும் வேதனையும்;
கூடவே குருதி வாடையும்.


எதிரெதிர் வாக்கியங்களில்
நிறுவப்பட்டதெல்லாம் இருவரும்
யோக்கயமில்லையென்பதன்றி
பிறிதொன்றில்லை.


பின்மாலைப் பொழுதில்
குற்றவுணர்ச்சி ததும்பும் வார்த்தைகளில்
தோய்ந்திருந்த மருந்து
குணமாக்குறது ரணங்களை


காயமாக்குவதும்,
காயமாற்றுவதும்
வார்த்தைகளே.


எதைப் பேசுகிறோம்
என்பதிலிருக்கிறது
வாழ்க்கை.



Image courtesy : © Keeweeboy | Dreamstime.com

.

Wednesday, April 22, 2009

தேர்தல்


எட்டுக்கெட்டு
சதுரக் கட்டங்கள்
பாதி வெள்ளை
மீதி கறுப்பாக.

ராஜா, ராணி, மந்திரி,
குதிரைப்படை, காலாட்படை
இரு புறமும் அணிவகுத்து நிற்க
துவங்குகிறது யுத்தம்.

மந்திராலோசன, சதித்திட்டம்,
ராஜதந்திரம், நம்பிக்கைத் துரோகம்
விதிகள், மீறல்கள்
என ஆக்ரோஷப் போர்

வெற்றிக்களிப்பும்
அவமானங்களும்
வலிகளும்
வேதனைகளுமாக


ராஜாவோ சிப்பாயோ
ஆட்டம் முடிந்ததும்
அடைபடப் போவது
ஒரே பெட்டியில்
என்பதறியாமல்


.

Monday, April 20, 2009

டெக்னாலஜி ஹேஸ் ஹெல்ப்டு


அந்த ரயில் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நம் பதிவர் ஒருவரும் பயணிக்கிறார். எதிரே இரு அழகிய யுவதிகள் (கல்லூரி மாணவிகள்).

வந்ததிலிருந்து நம் பதிவரைப் மதிக்காமல் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அடிக்கண்ணால் ஒரு பார்வை பார்ப்பார்களே அது கூட இல்லை. இவரும் பொறுமையாக இருக்கிறார்.

ஈரோடு வரை பொறுமை காத்தவருக்கு அதற்கு மேல் தாங்காது எனத் தோன்றுகிறது. காரணம் இருவரும் தங்கள் மொபைலை எடுத்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அனுப்பவும் பெறவுமாக இருக்கிறார்கள்.

திடீரென்று இருவரின் முகங்களும் கலவரமாகிறது. தங்கள் செல்போனை விசித்திரமாகப் பார்க்கின்றனர். ஸ்விட்ச் ஆப் செய்து மீண்டும் உயிர்ப்பிக்கின்றனர். கலவரம் குறைந்தபாடில்லை.

இருவரில் ஒருவர் தனது மொபைலில் நண்பர்(நண்பி?) ஒருவரை அழைத்து “டேய் என் செல் போன்ல வைரஸ் ஃபவுன்ட்னு வருதுடா என்ன பண்ண?”

அந்த முனையிலிருந்து உடனே ஸ்விட்ச் ஆஃப் செய்யச் சொல்லி உத்திரவு வந்திருக்கும் போல, “ அதெப்படிடா ஹொசூர்ல அம்மா வந்து காத்திருப்பாங்க , நாட் ரீச்சபிள்னா பதட்டமாயிடுவாங்களே?”

எதிர்முனையிலிருந்து என்ன சொன்னார்களோ தெரியவில்லை இருவரும் மொபைலைக் கையிலேயே வைத்துக் கொண்டு பார்த்தவாறிருந்தனர்.

“எப்படிடீ ரெண்டு மொபைல்லயும் ஒரே சமயத்துல வைரஸ் வந்திருக்கும்? இவ்வளவு நேரமா இல்லாம?”

“வேற யாரு மொபைல்ல இருந்தும் வந்திருக்குமோ?”

“அதெப்படி நாமதான் நம்மளுதத் தவிர வேற எதையும் ரிசீவ் பண்ணலையே?”

இதப் பார்த்து நம்மாள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தவாறே அவர்கள் மொபைலை வாங்கி சரி செய்து கொடுத்து குறைப் பயணத்தையும் கடலை போட்டவாறே முடித்தார்.

அவர் யாருன்னு பூடகமாகத்தான் சொல்ல முடியும்.
1. ரயில் கோவையிலிருந்து பெங்களூர் செல்கிறது
2. அவர் ஒரு தொழிலதிபர்.
3. அவருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை.

அது சரி அவரு அந்தப் பெண்களை கவர்ந்தவிதம் எப்படி?

பொதுவாக ஒரு மொபைலில் ப்ளூடூத் ஆன் செய்தால் பக்கத்தில் ப்ளூ டூத் ஆன் செய்யப் பட்டிருக்கும் மொபைலின் மாடல் எண் அல்லது அதன் பெயர் வரும்.

பதிவர் மொபைலில் ப்ளூ டூத் ஆன் செய்து அவரது மொபைல் பெயரை “virus found"னு வைத்துக் கொண்டார். அந்த பென்கள் ப்ளூ டூத்தும் ஆனில் இருப்பதால் அவர்கள் மொபைலில் “virus found னு வந்திருக்கு.

ஆண் மயிலுக்குத் தோகை, சேவலுக்குக் கொண்டை போல அந்தப் பதிவருக்கு ப்ளூ டூத். டெக்னாலஜி எப்படியெல்லாம் உதவுது பாருங்க.


கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல
எதிர்ப் பதிவு
.

Friday, April 17, 2009

அந்நியன்


பக்கத்து வீடு குமார் குருக்கள்
அடுத்தது பால்கார மணி
அதற்கடுத்து ஐசிஐசிஐ சரவணன்
எதிர்வீடு வயதான தம்பதியர்
பிள்ளைகள் இருவரும் மேல்நாட்டில்
அதற்கடுத்து அகிலேஷ் அப்பா
அவங்க மாடியில டிசைனர் சிவா
எல்லோரையும் தெரிகிறது
என் மனைவிக்கு.


இங்கு வந்து
இரண்டு வருடமாகியும்
தெரியவில்லை
எனக்கு யாரையும்;
என்னை யாருக்கும்.


.

Thursday, April 16, 2009

தன்னெஞ்சறிவது பொய்யற்க

ஒட்டன்சத்திரம் அவுட்டர் தாண்டியதும் ரயில்வே கேட்டில் நிற்கும்படி ஆயிற்று. சரி என கார் எஞ்சினை அனைத்து விட்டு அருகிலிருந்த அக்கவுண்டண்ட் கார்த்தியிடம் கேட்டேன், “கார்த்தி போன மாசம் அனுப்பிச்ச சரக்குக்கு இன்வாய்ஸ ரிவைஸ் பண்ணி இந்த மாசத்துல கேட்டிருந்தானே சேட், அனுப்பினியா?”

“அண்ணே சேட்டுகிட்ட இருக்க ஆளு ஒரு கூமுட்டைண்ணே”

“ஏம்ப்பா?”

“போன மாசம் பண்ணுன இன்வாய்ஸ் காப்பிய அனுப்பிச்சு அப்பா சாமி இதுக்குப் பதிலா நீங்க கேட்ட மாதிரி இந்த மாசம் இன்வாய்ஸ் பன்ணியிருக்கேன் . புதுசுல கையெழுத்துப் போட்டு சீல் வச்சு அனுப்புங்க, பழசக் கிழிச்சிருங்கன்னு சொல்லியிருந்தேன்”

“சரி அதுக்கென்ன?”

“அவன் பழசு புதுசு ரெண்டுலயும் சீல் வச்சு கையெழுத்துப் போட்டுப் பக்காவா அனுப்பியிருக்கான். ஒரு சப்ளைக்கு ரெண்டு இன்வாய்ஸ். நமக்கு நல்ல சான்ஸ்ணே. எத்தனை தடவ சேட் நமக்கு டெபிட் நோட் அனுப்ச்சிருக்கான். இப்ப அந்த லாஸையெல்லாம் சரி பண்ணிடலாம்ணே”

“அந்த மாதிரியெல்லாம் எதையும் பண்ணிடாதே. ஊருக்குப் போனதும் முதல் காரியமா பழைய இன்வாய்ஸ கிழிச்சுப் போடு”

“என்னண்ணே, இதுவே நான் முன்னாடி வேலை செஞ்ச கம்பெனியா இருந்தா இன்னேரம் எனக்கு இன்செண்டிவ் கொடுத்திருப்பாரு, நீங்க என்னடான்னா நீதி நேர்மைன்னுட்டு”

“ சேட்டு டெபிட் நோட்டு போடுறது சரக்குல இருக்க குறைபாட்டுக்குத்தான். நம்ம மேல கடுப்புல இல்ல. எத்தன தடவ அவசரமாப் பணம் வேணும்னு சேட்டுகிட்ட வாங்கியிருக்கோம் சேட்டு அதுக்கு வட்டியோ இல்ல வரவேண்டிய பேமெண்டுல கழிக்கவோ செஞ்சாரா? கைமாத்து வேற, வரவு செலவு வேறன்னு தெளிவா இருக்காரு. கார்த்தி ரெண்டு விஷயம். ஒன்னு இது நம்பிக்கைத் துரோகம். ரெண்டு என்னைக்கிருந்தாலும் ஷூவுக்குள்ள சிக்குன கல்லு மாதிரி என்னை உறுத்திக்கிட்டே இருக்கும். கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் செய்ய மாட்டேன்”

காரருகில் கடலை விற்கும் சிறுமி, “அண்ணே அவிச்ச கல்லைண்ணே, ரெண்டு ரூவாதான்னே”,

“ சரி ஆளுக்கு ரெண்டு கொடு” என்று பத்து ரூபாயை நீட்டினேன்.

“அண்ணே சில்லறை இல்லண்ணே இன்னொரு பொட்டலம் தரவா?”

“வேண்டாம்மா, பாக்கிய நீயே வச்சிக்க”

ரயில் கடந்திருக்கவே கேட் திறக்கப்பட்டு வாகனங்கள நகரலாயிற்று. ஸ்பீடு பிரேக் அருகில் வேகத்தைக் குறைத்த போது கடலை விற்கும் சிறுமி வேகமாக ஓடி வந்து, “ அண்ணே உழைக்காம வந்த காசு நிக்காதாம்ணே எங்காத்தா சொல்லிச்சு. இந்தாங்க பாக்கிக்காசு” என்று என் ஜன்னல் வழியாக வீசி எறிந்தாள்

தன் காலடியில் விழுந்த இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்த கார்த்தி நாணயத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்

டிஸ்கி : முதல் பகுதி என்னோட கற்பனை. இரண்டாம் பகுதி சென்ற வாரம் சிவகாசி செல்லும் போது நடந்தது.


.

குசும்பனை வாழ்த்துவோம்


நம்ம குசுமபன் இன்று திருமண வாழ்வின் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறான்.

அய்யனார் தம்பதியருக்கும் இன்று திருமண நாள்.

வாங்க தம்பதிகளை வாழ்த்துவோம்.


பதிவிட்டவர்கள்

பரிசல்


நாமக்கல் சிபி

புதுகை தென்றல்

தூயா

சஞ்சய்

புதுகை அப்துல்லா

சென்ஷி

ஜோசப் பால்ராஜ்


சங்கமம்

காயத்ரி (G3)


கார்க்கி

.

Tuesday, April 14, 2009

அது மட்டும் எப்படி?




எனக்குப் புரியலீங்க
பதிவப் படிச்சிட்டு என் தங்கமணி கேட்ட கேள்விகள் இது. வழக்கம் போலவே எனது பதில் ‘ஙே'


1. ஃபெடெரர் எத்தனை முறை ஜெயிச்சாரு, கம்பிர் எத்தனை சதமடிச்சாருன்னு எல்லாத்தையும் ஒன்னுவிடாம ஞாபகம் வச்சுக்குங்க. ஆனா அரைக்கிலோ துவரம் பருப்பு வாங்கிட்டு வாங்கன்னு சொன்னது மட்டும் மறந்த்துடுதே அது ஏன்.

2. தங்கத்துல எனக்கு ஒன்னும் ஆசை இல்லைன்னு பெரிய ரிஷி மாதிரிப் பேசுறீங்களே, அவசரத்துக்கு அடமானம் வைக்க எங்கிட்டதான வர்ரீங்க.

3. உங்களுக்கு மட்டும் ப்ரவுன் கலர் சட்டை, கிரீம் கலர் பேண்டுன்னு கரக்டா மேட்சிங்கா எடுக்கிறீங்க. ஒரு சேலை எடுத்துக் குடுத்துட்டு அதுக்கு ப்ளவுஸ் எடுக்கதுக்குள்ள முகத்தைத் தூக்கி வச்சுக்கிறீங்க.

4. உங்க வீட்டுக்குப் போனா பிரண்டப் பாக்குறேன்னு நாள் முழுவதும் வெளிய சுத்துறீங்க. அதே எங்க வீட்டுக்கு வந்தா வெளிய போகவே மாட்டேங்கிறீங்க. எங்க அக்கா தங்கச்சிகளோட ஃப்ரீயா பேச முடியுதா ஒன்னா?

5. ஐந்தாவது திட்டக் கமிசன் அறிக்கை, தேர்தல் புள்ளி விபரம் எல்லாம் விரல் நுனியில வச்சிருக்கீங்க. நம்ம பையன் போன பரிட்சையில் கணக்குல வாங்குன மார்க் ஞாபகம் இருக்கா?

6. எங்க வீட்டுல இருந்து யாரு வந்தாலும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆகுற மூஞ்சி என் தங்கச்சி வர்ரான்னு சொன்னா மட்டும் 1000 வாட்ஸ் பல்பு போல பிரகாசிக்குதே ஏன்?

7. பிரண்டுகூட வெளியே போறேங்கிறீங்க. செலவுக்கு 100 குடுத்தாலும் சரி 1000 குடுத்தாலும் சரி அம்புட்டையும் காலி பண்ணீட்டு அடுத்த நாள் காசு கேக்குறீங்களே அது ஏன்.

8. பிரண்டுகிட்ட மட்டும் இதோ கிளம்பீட்டன், ஒண்டிபுதூர் வந்திட்டேன், சிங்காநல்லூர் வந்திட்டேன்னு கூப்பிட்டோ இல்ல மெசேஜ் பண்ணியோ சொல்லிடுறீங்க. நீங்க வருவீங்கன்னு 5 மணியிலருந்து காத்திட்டிருக்க எனக்கு ஒரு போன் பண்ண முடியாதா?

9. புதுசா ஒரு ரெசிபி படிச்சு வித்தியாசமா சமைச்சா அது என்னன்னுகூடக் கேக்காம மாடு வைக்கப் பில்லு மேஞ்சா மாதிரி சாப்பிடுறீங்களே இது என்ன ஞாயம்?

10. என்னை ஊருக்கு அனுப்புறதுல இருக்க வேகம், ஊருக்கு வந்து என்னக் கூப்பிடுறதுல இல்லியே? அது ஏன்?

டிஸ்கி : கொஞ்சம் அடி பலம்தான்.
Picture Courtesy : Alexie Talimonov

.

Monday, April 13, 2009

எனக்குப் புரியலீங்க


நாம காத்திருக்க பஸ் வராம வேற ரூட்ல போற பஸ்ஸு வரும். அதே சமயம் வேறொரு நாள்ல இந்த பஸ்ஸுக்குக் காத்திருந்தா வேற பஸ்ஸு அடிக்கடி வந்து வெறுப்பேத்தும்.

அதே மாதிரி டிக்கட் கவுண்டர்ல நாம நிக்கிற க்யூ நகராது. பக்கத்து க்யூ எல்லாம் சீக்கிரம் நகரும். டக்குன்னு அதுல போய் நின்னா, நாம் கவுண்டர் கிட்ட வந்ததும் குளோஸ் பன்ணிடுவான்.

இதெல்லாம் ஏன் இப்படின்னு தெரியல. அதே மாதிரி கீழே இருக்கதும் எனக்குப் புரியல(கல்யாணமாகி 20 வருஷம் ஆன பின்னாலும்). யாராவது புரிஞ்சவங்க விளக்குங்க ப்ளீஸ்.

1. நம்ம தம்பிக என்னதான் நல்லாப் படிச்சு நல்ல உத்தியோகத்துல இருந்தாலும் நம்ம தங்கமணிக மதிக்கிறது இல்ல. ஆனா அவங்க தம்பி எத்தனை அரியர் வச்சிப் பாஸ் பண்ணியிருந்தாலும் ரெம்ப உயர்வானவன். செமஸ்டர் எழுதும்போது உடம்பு சரியில்லாம்ப் போயிருக்கும் இல்லைன்னா, வாத்தியார் கஞ்சத்தனமா மார்க் போட்டிருப்பார்.

2. ஊர்ல இருந்து நம்ம அப்பா அம்மா வந்தாலே தங்கமணிக்கு உடம்பு சரியில்லாமப் போயிரும். ஆனா அதே அவங்க அப்பா அம்மா வந்தா சரியில்லாத உடம்புகூட சரியாகிடும் சட்டுன்னு.

3. நம்ம பிறந்த ஊருக்குப் போனா உடனே கிளம்புங்க கிளம்புங்கன்னு அடம்பிடிப்பாங்க. தண்ணி வரும் செடியெல்லாம் வாடும்னு டயலாக்கெல்லாம் சொல்லுவாங்க. ஆனா அதே அவங்க வீட்டுக்குப் போய் நாலு நாளானாலும் இப்பத்தானே வந்தோம் இன்னும் ரெண்டு நாள் இருக்கலாம்பாங்க.

4. அவங்க ஆசையா எடுத்துக் குடுத்த சட்டை நமக்குப் பிடிக்கலன்னாலும், நல்லா இருக்குன்னு சொல்லிப் போட்டுக்குவோம். அதே நாம எடுத்துக்குடுத்த சேலை கலர் சரியில்லை, டிசைன் சரியில்லை, பார்டர் சரியில்லை குறைஞ்ச பட்சம் அதிக விலைன்னு சொல்லியாவது நம்மள நோகடிப்பாங்க.

5. அவங்க சைடு ஆளுக வரும்போது செய்யுற விசேச சமையல் நம்ம சைடு ஆளுக வரும்போது ஒப்பேத்துன சமையலா மாறுவது என்ன அதிசயம்ங்க.

6. அவங்களுக்குத் தெரியாம வீட்டுக்கு வெளியகூட நம்மால் 10 ரூபாய் சேர்த்து வைக்க முடியல. ஆனா நம்ம வீட்டுலயே நமக்குத் தெரியாம ஆயிரக்கணக்குல ஒளிச்சு வச்சிருப்பாங்க.

7. ஈ பி பில்லக் கட்டி, வீட்டு வாடகை ஒழுங்காக் கொடுத்து, கேபிள், மளிகைன்னு எல்லாத்தையும் சரியாச் செய்வோம். ஆனா ஒரு வேலை செய்யத் துப்பில்லைன்னு திட்டுவாங்க. அதே அவங்க அக்கா வீட்டுக் காரர் ஒருவேலைக்கும் ஆக மாட்டார் அவரை ரெம்பத் தூக்கி வச்சுப் பேசுவாங்க.

8. நம்ம குழந்தை குறும்பு பண்ணுனாலோ அல்லது ஏதாவது ஏடாகூடம் பண்ணுனாலோ உங்க வாரிசப் பாருங்கம்பாங்க. அதே நம்ம வாரிசு ஏதோ கோப்பையோ அல்லது பரிசோ வாங்கி வந்தால் எம்புள்ளைன்னு உச்சி முகர்வாங்க.

9. ஆபீஸ்ல முடிக்க முடியாத ஒரு வேலைய எடுத்துவந்து வீட்டுல செய்யும்போதுதான் நொய் நொய்ன்னு ஏதாவது வேலை சொல்லுவாங்க. ஆனா கழிசடையா ஒரு சீரியல் பாத்திட்டிருக்கும்போது நாம ஒரு வேலை சொன்னா சீரியல் பாத்திட்டிருக்கேன்லம்பாங்க.

10. அரைப்பவுன்ல ஒரு மோதிரம் இல்ல அதிகப்பட்சமா ஒரு பவுன்ல ஒரு செயின் அவ்வளவுதான் நமக்கு. ஆனா அவங்க மட்டும் வருஷா வருஷம் புதுசா வாங்குவாங்க. இல்லன்னாலும் அழிச்சு டிசைன் மாத்துவாங்க.

டிஸ்கி : சும்மா தமாசுக்கு.

.

Saturday, April 11, 2009

கதம்பம் - 12-4-09

தங்க நாற்கரத் திட்டம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முன்பெல்லாம் கோவையிலிருந்து 7 மனி நேரம் பயணம் செய்து அடைந்த தூரத்தை இப்பொழுது 5 மணி நேரத்திலேயே அடைய முடிகிறது.

சிவகாசிக்கும் கோவைக்கும் உள்ளதூரம் 350 கி மிக்குள்தான் இருக்கும். ஆனால் பயணம் செய்யும் சாலை சரியில்லமல் இருந்ததால் 7 மணி நேரம் ஆனது. மேலும் மதுரைக்குள் நுழைந்து வெளியேற எல்லவிதமான சாகசமும் தெரிந்திருக்க வேண்டும்.

திடீரென்று குறுக்கே திரும்பும் டூ வீலர்காரரை மன்னித்து பெரிய மனிதன் ஆவது உசிதம். இல்லையெனில் கீழ்க் கண்ட சம்பாஷனை உத்திரவாதம்.

“என்னண்ணே சடார்னு திரும்பீட்டீங்க?”

“அதான் திரும்பீட்டமுல்ல, பேசாமப் போய்ட்டேருங்கண்ணே”

“இல்லண்ணே ஏதாவது ஆயிருந்தா?”

“அதான் ஒன்னும் ஆவலைல்ல, போய்ட்டேருண்ணே”

முதல் பதிலில் இருந்த “ங்க” இரண்டாவில் மிஸ் ஆனதைக் கவனிக்கவும்.

திருமங்கலத்திலிருந்து சமயநல்லூர் வந்து சேருவது போல ஒரு பைபாஸ் ரோடு மதுரையைச் சுற்றிப் போட்டிருக்காங்க. தூரமும் குறைகிறது. சிட்டிக்குள் டிரபிக்கில் ஓட்டுவதால் ஏற்படும் மன அழுத்தமும் குறைகிறது.

வாஜ்பாய் அரசுக்குத்தான் நன்றி சொல்லனும்.

*********************************************************************

சென்ற வாரம் தங்கமணி தங்கத்துல ஒரு வளையல் வாங்கலாம்னாங்க. சரின்னு ரெண்டு பவுன்ல ஒரு வளையல் தேர்வு செஞ்சு எஸ்டிமேசன் கேட்டா 28,000 போட்டுக் கொண்டு வந்தார் சேல்ஸ் மேன். அன்றைய தங்க விலை நிலவரம் பவுன் ஒன்றுக்கு ரூ 11080/-.

விளக்கச் சொல்லிக் கேட்டா வேற ஒருத்தர்கிட்டக் கை காட்டினார். அவர் கிட்டப்போனா, ”அது கம்ப்யூட்டர் போட்டது அதுல தப்பே வராது” ன்னார். ”பரவாயில்லைங்க எனக்குப் புரியுறா மாதிரிச் சொல்லுங்க”ன்னு சொன்னதுக்கப்புறமா வேற பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்தாரு. ”சாரி சார் மிஸ்டேக் ஆயிருச்சு”ன்னுட்டு. அதுக்கப்புறம் அதுல செய்கூலியக் கழிச்சு சேதாரம் 20% இருந்தத 15% ஆக்கி மொத்தத் தள்ளுபடின்னு எல்லாம் செஞ்சு 25,500க்கு வாங்கினோம். இதுவே அதிகம்தானோ?

*********************************************************************

எங்குழந்தைக, தம்பி குழந்தைக, மச்சினன் குழந்தைகன்னு ஒரு பட்டாளம் விடுமுறைக்குச் சேர்ந்த்ததால 'பட்டாளம்' படம் பார்த்தோம்.

பசங்கன்னா தண்ணியடிப்பாங்க, ஈவ் டீஸிங் பண்ணுவாங்க, ரவுடிக மாதிரி ஊரச்சுத்துவாங்கன்னு தமிழ்ச் சினிமாவுல இருந்த பிம்பத்த உடைச்சதுக்காகப் பாராட்டினாலும், பாத்திரத்ங்களைச் சித்தரிச்சதுல கோட்டை விட்டுட்டாங்க. கதைன்னு ஒன்னு இல்லவே இல்லைங்கிற மாதிரித்தான் இருக்க ஒரு வரிக் கதையும் இலக்கில்லாம நகருது. சில சமயம் நகரவே இல்லை. நதியா மாதிரி தேர்ந்த நடிகை, நடிப்பில முதிர்ச்சி இருக்கது பத்தாதுன்னு முகத்திலயும் முதிர்ச்சியக் காட்டுற மாதிரி மேக்கப்.

பாட்டுக்கள்ல ஒண்ணு கூட மனசுல நிக்கல. அதே போல ரீ ரிக்கார்டிங் கொடூரம். யாராவது இதுக்கு ஒரு பொதுநல வழக்குப் போட்டா நல்லா இருக்கும். சத்தமாப் போட்டாத்தான் நல்ல ரீரிக்கார்டிங்னு முடிவு பண்ணீட்டாங்களோ?

மொத்தத்துல நல்லா வந்திருக்க வேண்டிய படத்த எல்லோரும் உழைச்சுக் கெடுத்திருக்காங்க.

*********************************************************************

தங்கள் பால்யத்தைக் கிராமங்களில் கழித்தவர்கள் பாக்கியவான்கள் எனச்சொல்லலாம். குழிவண்டுன்னு ஒரு வண்டு பாத்திருக்கீங்களா? மண்ணுக்குள்ள போய் தன்னைச் சுற்றி அழகிய வட்டம் ஒன்றை ஏறபடுத்தும். அது தோண்டி எடுத்த மண்ணை ஒரு கூம்பின் கீழ்ப்பகுதி போன்ற அமைப்பில் போடும். சரியான வித்ததில், காம்பஸ் கொண்டு வரைந்தது போல அது போட்டிருக்கும் வட்டம் ஆச்சர்யமான ஒன்று. அதைபோல காணாமல் போனவைகள் பற்றிய கவிதை ஒன்றை சமீபத்தில் படித்தேன் உங்களுக்காக இங்கே.


குழிவண்டு என்று ஒன்றிருந்தது தெரியுமா?


சிட்டுக்குருவிகளைப் பார்க்க முடிவதேயில்லை தெரியுமா?
கரிச்சான்குருவிகளைப் பார்க்க முடிவதேயில்லை தெரியுமா?
கம்பளிப்பூச்சிகளைக்கூட அவ்வளவாகக் காணவில்லை தெரியுமா?
ரயில்பூச்சிகளைக்கூட அவ்வளவாகக் காணவில்லை தெரியுமா?
குழிவண்டு என்று ஒன்றிருந்தது தெரியுமா?
மலஉருட்டி என்று ஒன்றிருந்தது தெரியுமா?
மூஞ்சுறுகள் அரிதாகி வருகிறது தெரியுமா?
பன்றிகள் அரிதாகி வருகிறது தெரியுமா?
ஓணான்கள் நிற்க இடமில்லாமல் தலைமறைவு
ஓட்டத்திலேயே இருக்கிறது தெரியுமா?
அரணைகளும் அப்படியேதான் தெரியுமா?
ஈக்கள்கூட எப்போதாவதுதான் வருகிறது தெரியுமா?
புழுக்கள்கூட எப்போதாவதுதான் கண்ணில் படுகிறது தெரியுமா?
இரவில் படைபோல சூழ்ந்து ஒலியெழுப்பிய பூச்சிகளில்
பாதியைக்கூட இப்போது காணவில்லை தெரியுமா?
கருக்கலில் ஒரேயரு மரத்திலிருந்துகூட
ஆயிரக்கணக்கான பட்சிகளின் முதல் சிறகடிப்போசையை
முன்னெல்லாம் கேட்கலாம் தெரியுமா?
மிதிபட்டு செத்த எறும்புகளின் சிரிப்புகளோடு
சிற்றுண்டி உரையாடல் முடிந்தது.

- த. அரவிந்தன், 'கனவு - 2008' சிற்றிதழில்.


*********************************************************************

கதம்பத்தில் வரும் சிரிப்புகளை கொஞ்ச நாட்களுக்கு நிறுத்திவிடலாம் எனத் தோன்ற வைக்கிறது அரசியல்வாதிகள் அடிக்கும் கூத்து.

தேர்தலை இரண்டாம் பட்சமாக வைத்து இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து போராடுவோம். தமிழினத்தைக் காப்போம்.
சொன்னது யார்?

*********************************************************************

டெம்ப்ளேட் வெயிலான் பரிந்துரை செய்தது. நன்றி அவருக்கு.


.


Saturday, April 04, 2009

மீண்டும் முத்திரைக் கவிதைகள்


ஆனந்த விகடனில் வெளியான முத்திரைக் கவிதைகள் சிலதை ஏற்கனவே இந்தப் பதிவில் வாசித்திருப்பீர்கள். இன்னும் சில இங்கே.


அகத்தகத்தகத்தினிலே

காதலர் தினம்,
அன்னையர் தினம்
என வரிசையாய்
எல்லா தினங்களின் போதும்
நீ கொடுத்த
முத்தங்கள், கடிதங்கள்,
வாழ்த்து அட்டைகள், பரிசுகள்
என எல்லாவற்றையும்
அடிக்கடி நினைத்துப் பார்த்து
உயிர்த்திருக்கிறேன் பலமுறை.
வழக்கமானதொரு
மாலைப்பொழுதில்
என் தலை கோதி, உச்சி முகர்ந்து
'.....ப் போல் இருக்கிறார்ய்'
என்று அனிச்சையாய்
யாரோ ஒரு நடிகனின் பெயரை
நீ சொன்னபோது
செத்துப்போய்விட்டேன்
ஒரேயடியாக

- ஆதி

நிலாசேனல்

தூக்கம் தொலைந்த இரவில்
எலெக்ட்ரான்கள் ஒளிரும் திரையில்
குறையாடைக் குமரிகளின்
பூனைநடை அலுத்து
கிழநாயகனால் கழுத்து முகரப்பட்ட
இளநாயகியின் பொய்க்கிறங்கலில் சலித்து
ஆண்குரலில் சிரித்த
வெள்ளைக்காரியை வெறுத்து
ஓடுடைந்து வெளியில் வரும்
பறவைக்குஞ்சையும் பார்க்கப்பிடிக்காமல்
ஒற்றைப் பொத்தான் அழுத்தலில்
உலகத்துக் கதவுகளையெல்லாம் மூடிவிட்டு
இருள் சூழ்ந்த அறையின்
ஜன்னலுக்கு அப்பால் விழித்திருந்த
நிலவோடு சிநேகிதமானேன்.

- எஸ்.பாபு


வலி

ஓங்கி ஒலிக்கும்
கெட்டிமேளத்தில்
அமுங்கிப் போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்போதும்

- வித்யாஷங்கர்

'சிட்டி'சன்

நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை

முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை

கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை

அடுக்குப் பானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை

ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று

- தாயம்மா

பாதசாரிகள் கவனத்திற்கு

கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!

- வனவை தூரிகா

நன்றி : ஆனந்த விகடன். முத்திரைக் கவிதைகள் (2002)

.

Friday, April 03, 2009

கதம்பம் - 03/04/09

நெடுநாள் பாக்கி ஒன்றை வசூல் செய்ய நேற்று திருப்பூர் சென்றிருந்தேன். இரவு வெயிலான், பரிசல் மற்றும் சாமினாதனுடன்(ஈரவெங்காயம்) சாப்பாடு மற்றும் நள்ளிரவுக்குப்பின்னும் நீண்ட அரட்டை.

நெடுநாட்களுக்குப் பிறகு மனது லேசானதாக உணர்ந்தேன். அலையிலடித்துச் செல்லப்படும் வாழ்வில் இதுபோல சில ஆசுவாசங்கள் அவ்வப்போது தேவைப்படுகிறது.


********************************************************************************

காலை உணவை ஆரியபவனில் வெயிலானோடு சாப்பிட்டேன்.

“ஆரியபவன் என இந்தியா முழுவதும் இருக்கிறதே, எங்காவது திராவிட பவன் உண்டா?”

வெயிலான் இல்லையென்றார். யாராவது பார்த்திருக்கிறீர்களா?

********************************************************************************

திருப்பூர் கம்பெனிகள் தூங்கி வழிகின்றன. ரிசெசன் பாதிப்பை உணர முடிகிறது. நான் சென்ற கார்ப்பரேட் ஒன்றில் 30 பேர் அமர்ந்து வேலை செய்யும் ஹாலில் பாதி லைட்தான் எரிந்ததை மின்சார சிக்கனம் என தவறாக நினைத்து பெருமைப்பட்டேன். உள்ளே சென்றதும்தான் தெரிந்தது பெரும்பாலோரை நிறுத்திவிட்டார்களாம்.

விளம்பரபிரிவு நபருடன் பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்துக் கேபின் பெண்மணி ஒரு உதவி கேட்டார்.

“சார் ஒரு 60 பேருக்கு லெட்டர் அடிக்க வேண்டி இருக்கு. மெயில் மெர்ஜ் சொல்லித்தர முடியுமா?”

என்ன செய்யவேண்டும் எனப் பேப்பரில் எழுதிக் கொடுத்தேன். இருப்பினும் என்னை ஒரு முறை பார்த்து சரியாக இருக்கா எனச் சொல்லச் சொன்னார்.

சரி என அவரது மானிட்டரில் பார்த்தால் அது எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர்.

மொத்தம் 60 பேர். 31-03-2009 அன்று நீக்கப்பட்டவர்களுக்கானது.

********************************************************************************

என் பழைய கவிதை

நேற்று என் பழைய கவிதைப் புத்தகத்திலிருந்து
இரண்டு வரிகளை தூசிதட்டி எடுத்து,
இடம் மாற்றி வைத்தேன்

உவமைகளில் சிக்கி, தவித்துக் கொண்டிருந்த
ஒரு கிளியை பறக்கவிட்டேன்
ஏரியை திறந்துவிட்டேன்

மேலும் ஒரு வார்த்தைக்கு வண்ணமடித்து
பொலிவு பெறச்செய்தேன்

இன்னும் ஒரே ஒரு வார்த்தைதான்
தேவை இருக்கிறது

உங்கள் இதயத்தை துளைக்கப்போகும்
அந்த ஒரு வார்த்தையை நன்றாக
கூர்தீட்டிக் கொண்டிருக்கிறேன்.

மண்குதிரை
எழுதிய கவிதை இது.

இவரைப் பற்றிய மேல் விபரங்கள் ஏதும் அவரது வலையில் கிடைக்கவில்லை.
நல்ல கவிதைகள் எழுதுகிறார். நல்ல உயரங்கள் செல்வார்.

நவீன விருட்சம், படித்துறை, திண்ணை போன்றவைகளில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளியாகின்றன.



********************************************************************************


நண்பர்கள் சாப்பிடச் செல்கிறார்கள். அதில் ஒருவன் அவர்கள் டேபிளுக்கு சர்வ் செய்யும் சர்வருக்கு டிப்ஸ் கொடுக்கிறான்.

அவனைப் பார்த்து நண்பன் கேட்டான், “சாப்டுட்டுத்தானே டிப்ஸ்கொடுக்கனும் நீ ஏண்டா முன்னாடியே கொடுக்கிறே?”

“கடைசியிலே சொல்றேன்”

சாப்பிட்டு முடிந்து வெளியே வந்ததும் சொன்னான், “ சர்வர் பில்லைக் எங்கிட்டக் கொடுக்கக் கூடாதுங்கிறதுக்குத்தான் முன்னாடியே கவனிச்சுட்டேன்”

“அடப்பாவி நல்லா விவரமாத்தாண்டா இருக்கீங்க”

********************************************************************************

Wednesday, April 01, 2009

மண்ணைத் துளைக்கும் வேர்கள்



வஞ்சிபாளையம் பிரிவில்
இறங்கி நடந்தால்
இரண்டு ரூபாய்
மிச்சம் பிடிக்கலாம்;
நடக்கலானார் நாச்சாக் கவுண்டர்

500 ரூபாய்
சேத்துத் தந்திருந்தால்
ஆலன் சோலியில் எடுத்திருப்பேன்
இப்ப
பீட்டர் இங்கிலாண்ட்தான்
அங்கலாய்த்தான்
தனியார் கல்லூரியில்
படிக்கும் அவர் மகன்

பூக்கும் கிளைகளுக்குப்
புரிவதில்லை
வேர்களின் வேதனை



Picture courtesy : QT luong.


.