
மு கு : இது ஒரு பொண்ணோட டைரிக் குறிப்பு. தேதி முக்கியமில்லை.
காலேஜ் ஃபர்ஸ்ட் டே இன்னைக்கு. ரெம்பப் பேமஸான காலேஜ். இடம் கிடைக்கிறதே பெரிசு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும்தான் நன்றி சொல்லணும். அவங்க மனசு நோகம நடந்துக்கணும். அவங்களுக்கு பேரும் புகழும் வாங்கித்தர்ற மாதிரி நடந்துக்கணும். ஐ லவ் மை மாம் அண்ட் டாட். தெ ஆர் சிம்ப்லி க்ரேட்.
காலேஜ் சேந்ததுக்கப்புறமா நேரமே இல்லை. அதான் எழுதலை. ஐ லைக் காலேஜ். ஸ்கூல் மாதிரி இல்லாம ஜாலியா இருக்கு. ஸ்கூல்ல எல்லாருக்கும் பயப்படணும். இங்க அப்படி இல்ல. ஜஸ்ட் டோண்ட் கேர். பசங்கதான் பாவம் இம்ப்ரெஸ் பண்ணப் பாக்குறாங்க.
இந்த லலிதா ரெம்ப மோசம். நான் ஸ்ரீராமுக்கு ரூட் விடுறேன்னு கலாட்டா பண்ணுறா. ம் நானாவது அப்படியெல்லாம் செய்யுறதாவது. ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ் அவ்வளவுதான். நான் யாரையும் லவ் பண்ண மாட்டேம்ப்பா. அப்பா படுற சிரமம் தெரியும். அம்ம படுற கஷ்டம் அதை விட அதிகம். எப்படித்தான் வேலைக்கும் போய்ட்டு வீட்டையும் மேனேஜ் பண்ணுறாங்களோ?
இன்னைக்கு ஒரு இண்டரெஸ்டிங்கான விஷயம் நடந்தது.ஸ்ரீராமும் நானும் காபி ஷாப் போனோம். ஸ்ரீராம் நல்ல பையன். தெளிவா இருக்கான். நல்ல கோல்ஸ் எல்லாம் வச்சிருக்கான். காதல் கீதல்ல எல்லாம் அவனுக்கு இண்ட்ரஸ்ட் இல்லை என்னை மாதிரியே. வீ ஆர் ஃப்ரண்ட்ஸ். ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்.
எல்லொரும் அன்ன ரெம்ப ஓட்டுராங்கப்பா. நான் ஸ்ரீராமோட சேர்ந்து சுத்துறது காதலாம். வேற எதுவுமில்லையாம். என்னாலயே நம்ப முடியல அவஙக சொல்லுறது. ஸ்ரீராமக் கேட்டா நிறுத்தாம சிரிக்கிறான். எங்க ஃப்ரன்ட்ஷிப்ப புரிஞ்சுக்க, நம்ப முடியாத அளவுக்கு எல்லொரும் இருக்காங்க. சுத்த மோசம். எனக்கு அப்பா அம்மாதான் முக்கியம்
ஸ்ரீராம் இன்னைக்குப் ப்ரபோஸ் பண்ணுனான். நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். ஃப்ரண்ட்ஸா இருப்போம்னுதானே பழகுனான்.அப்புறமென்ன? எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு ஆனா லவ்வெல்லாம் பண்ணமாட்டேன். எனக்குப் படிக்கணும்.
வா செல்லம் வாவா செல்லம் பாட்டு எனக்கு ரெம்பப் பிடிக்குது ஏனோ தெரியலை.
ஸ்ரீராமப் பார்க்க பாவமா இருக்கு பழைய கலகலப்பு இல்லை அவங்கிட்ட. எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கான். எல்லோரும் நாந்தான் காரணம்ங்கிறாங்க. நான் என்ன பண்ணினேன். ப்ரண்ட்ஸ்னு சொல்லித்தானே பழகுனோம்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க.
ஒரு வேளை நாந்தான் தப்பு பண்ணீட்டேனோ? டேய் ஸ்ரீராம் சாரிடா.
ஒரு ஃப்ரண்ட் கஷ்டப் படுறத என்னால தாங்கிக்க முடியல. அதனாலும் நானும் சரின்னு சொல்லிட்டேன். ஸ்ரீராம் இப்பத்தான் பழைய ஸ்ரீராமா இருக்கான்.எனக்கு இப்பத்தான் நிம்மதி. என்னால ஒருத்தன் கஷ்டப் படுறத தாங்கிக்க முடியல.
ஆனாலும் இந்த ஸ்ரீராம் மோசம். பிரண்ட்ஸா இருந்தப்ப்ப இந்த சேட்டை எல்லாம் எங்க வச்சிருந்தான்னு தெரியலை? கொஞ்சம் வரம்பு மீறித்தான் பழ்குறான். ஆனா அதுதான் பிடிச்சிருக்கு.
டேய் ஸ்ரீராம், நாயே, பேயே, பன்னிக்குட்டி, புஜ்ஜிகுட்டி செல்லம். எப்படிடா என்னை இப்படி மாத்துனே? ஐ லவ் யு ஸ்ரீராம். யூ ஆர் சிம்ப்லி க்ரேட்.
டிஸ்கி : செமஸ்டர்ல கப்பு வாங்கி,அப்பா அம்மா காலெஜுக்கு வந்து ஹெச் ஓ டியப் பாத்து விஷய்ம் தெரிஞ்சு, படிப்பை நிறுத்தி, கதிரவனைக் கல்யாணம் பண்ணி கையில ஒண்ணு வயித்துல ஒண்ணுன்னு வழக்கமா முடிக்காம முடிவ உங்க கையில விட்டுட்டேன்.

16 பேரு பாராட்டியிருக்காங்க:
ஸ்கூல்ல இருந்து காலேஜ் போன வுடனே காதல் வந்துருது.அப்படின்னா தலைப்பு இப்படி மாத்திப் பாருங்க "வளர்சதை மாற்றம்"
//ஸ்கூல்ல இருந்து காலேஜ் போன வுடனே காதல் வந்துருது.அப்படின்னா தலைப்பு இப்படி மாத்திப் பாருங்க "வளர்சதை மாற்றம்"//
எக்சலண்ட் கரிசல் :)
கரிசல்,
கலக்குறீங்க.
அண்ணாச்சி,
சரியாக கோர்வைப்படுத்தி இருக்கிறீர்கள்.
ஆனால், முடிவை வாசகர்களுக்கு விட்டது கூடுதல் சிறப்பு.
நல்லாருக்கு அண்ணாச்சி.
நல்ல வேலை ஸ்ரீராம் பணக்காரன் இல்லை. அவனையே கட்டி வச்சிருப்பீங்க!
முடிவு பணத்தின் கையில்....
தலைப்பு புரியல. வளரும் சதையின் மாற்றம்?
//டேய் ஸ்ரீராம், நாயே, பேயே, பன்னிக்குட்டி, புஜ்ஜிகுட்டி செல்லம். எப்படிடா என்னை இப்படி மாத்துனே? ஐ லவ் யு ஸ்ரீராம். யூ ஆர் சிம்ப்லி க்ரேட்.//
சிம்ப்லி க்ரேட்...
அண்ணாச்சி ஐயம் வெரி சாரி...நீங்க ரொம்ப அவுட்டேட்டட்.
இப்பல்லாம் இந்த டைரியை +1 லேயே எழுத ஆரமிச்சுட்டாங்க
:)
//தலைப்பு புரியல. வளரும் சதையின் மாற்றம்?
//
:))))))
நல்லாத்தான் இருக்கு
//அண்ணாச்சி ஐயம் வெரி சாரி...நீங்க ரொம்ப அவுட்டேட்டட்.
இப்பல்லாம் இந்த டைரியை +1 லேயே எழுத ஆரமிச்சுட்டாங்க//
:-))
அண்ணே.. +1ல இல்லண்ணே.. எட்டாப்புலேயே ஆரமிச்சிருது..
//அண்ணே.. +1ல இல்லண்ணே.. எட்டாப்புலேயே ஆரமிச்சிருது..
//
நாஞ் சொன்னது டைரி எழுதி ஆவணப்படுத்துறதை
:))
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. நான் சொல்ல வந்தது, தெ ஆர் சிம்லி க்ரேட் ல இருந்து யூ ஆர் சிம்லி க்ரேட்டுக்கு மாறும் பரிணாம வளர்ச்சி.
இதை சதை மாற்றம் எனக் கொச்சைப் படுத்த வேண்டாம். எங்க காலத்துல கடிதம் கொடுத்தோம். அடுத்து தொலைபேசி. செல் பேசி, இ மெயில் என தொடர்பு கொள்ளும் சாதனங்களின் வளர்ச்சி அவர்களை மன அழுத்தத்திற்காட் படுத்துவதைத்தான்.
வெறும் உடல் கவர்ச்சி மட்டுமன்றி மனதும் சம்பந்தப் பட்டது இது.
சீரான நடை...நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
அடுத்த வாரம் இது நம்ம பத்திரிக்கையில் வரும்.
அண்ணாச்சி, இத முழுக்க ஒரு குறு நகையோட படிச்சு முடிச்சேன். அந்த ரசாயன மாற்றத்தை எப்படி இப்படி உள்வாங்கி எழுதினீங்கன்னு ஆச்சரியமாயிருக்குது.செம ஸைக்காலஜி.
சிறுகதைகள் இன்னைக்கு எத்தனியோ, வடிவங்களில், உத்திகளோட எழுதப்படுது. நான் , இத ஒரு நல்ல உத்தியில் எழுதப்பட்ட சிறுகதையாகவே பாக்கிறேன்.
எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு .
:-))
Post a Comment