.
நண்பர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
பைபிளில் எத்தனையோ வசனங்கள் இருந்தாலும் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
”நான் உன்னைக் கைவிடுவதுமில்லை உன்னை விட்டு விலகுவதுமில்லை”
கடவுள் உங்கள் கூடவே இருந்து உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
வேட்டைக் காரனை எல்லோரும் துவைத்துத் தொங்க விட்டிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தது நர்சிம்மின் பதிவு. பதிவைப் பார்த்ததும் அவரை அழைத்துப் பேசினால் மனிதர் பொங்கி விட்டார். ”அண்ணாச்சி இன்னும் எழுதனும்னு நெனைச்சிருந்தேன். எவனாவது விஜய் ரசிகன் (கார்க்கி அல்ல) போட்டுத்தள்ளிடுவானோன்னு பயம் அதான் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கேன்” என்றார். ஹும் அடக்கி வாசிச்சதே இவ்வளவுன்னா?
ஃப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய் ஸ்டார், சூர்யா அப்பொழுதுதான் நடிகராகி இருக்கிறார். அந்தப் படத்திலிருந்து துவங்கி எவ்வளவு உயரம் வந்து விட்டார் சூர்யா. விஜய் தேங்கி விட்டார். சூர்யாவிற்குச் சொல்லிக்கொள்ளும்படி காக்க காக்க, கஜினி பொன்ற படங்கள் இருக்கையில் விஜய்க்கு அப்படி ஏதும் இல்லை என்பது கொடுமை.
எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதின் நஷ்டம் இதுதான்.
நாலு நாள் ஊருக்குப் போகிறேன் என்னை யாரும் தேடாதீர்கள் என ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினார் ஆதி. இவரை யாரும் தேடமாட்டார்கள் என்ற புரிதல் கூட இல்லாத அப்பாவி பாவம். அதற்கு வந்த பதில் மின்னஞ்சல் அதைவிட சிரிப்பு.
“நாலு நாள்தானா???? அவ்வ்வ்வ்வ்வ்”
“இந்த நாலு நாள் இனிய நாலு நாள்”
கேபிளின் பதில் உச்சம். “ என்னாது ஊருக்கு போறீங்களா. அப்ப திரும்ப வரும் போது குறும்படத்தோட இல்ல வருவீங்கா.. மக்கா.. எல்ல்லாரும் அலர்ட்டா இருங்கா..... ஓடுங்க.. பின்னாடி ஒரு படம் வருது.. (இங்கிலீஷ் த்மிழ் டப்பிங் பட வசனத்தில் படிக்கவும்)”
ஆனாலும் ரெம்பத்தான் ஓட்டுறாங்கப்பா.
மக்களின் பேராசை டுபாக்கூர் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுவதில் வெளிப்படுகிறது. ஆறே மாதத்தில் பணம் இரண்டு மடங்கு என்பதை எப்படி ந்ம்புகிறார்கள் எனத் தெரியவில்லை. எந்தத் தொழிலும் இது சாத்தியமில்லை.
சமீபத்தில் பணம் இழந்தவர் கொடுத்த வாக்குமூலம், “ ஆல்ட்டோ கார் வாங்கலாம்னு 2.5 லட்சம் வச்சிருந்தேன். இரண்டு மடங்கா கிடைச்சா ஹோண்டா சிட்டி கார் வாங்கலாமேன்னு அதுல போட்டேன். இப்ப உள்ளதும் போச்சு” அடப் பாவிகளா ஆசைக்கு அளவில்லையா?
ரூ 5000 கட்டி மெம்பர் ஆன பின் விளம்பரங்களை க்ளிக் செய்தால் பணம் கிடைக்கும் எனச் சொல்லி ஒருவர் சுருட்டியிருக்கிறார். ஆளுக்கு 5000 என்பதற்கு பதிலாக குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை X 5000 எனக் கட்டியிருக்கிறார்கள். இவர்கள் கிளிக்கிய விளம்பர நிறுவனங்களிடமும் நல்ல பணம் பெற்றிருக்கிறான் சுருட்டியவன். சுருட்டிய பணம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? 200 கோடி.
இந்த மாத மணல்வீடு (ஆசிரியர் ஹரி கிருஷ்ணன், ஏர்வாடி, குட்டப்படி அஞ்சல் மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம். செல் : 9894605371) இதழிலிருந்து கார்த்திகேயனின் கவிதை
மொன்னை மனசு
முற்றத்தில்
மழைநீர் கொஞ்சம்
மிச்சமிருக்கிறது
கத்திக் கப்பல்
செய்துதாவென்றது
குழந்தை
கத்தி எதெற்கென்றேன்
முட்டும் மீனை
வெட்டுவதற்கு என்றது
விழிகள் விரிய
முனை கொஞ்சம்
மழுங்கலாகச்
செய்து கொடுத்தி விட்டேன்
தெலுங்கானா பிரச்சினை நாள்தோறும் புதிய ரூபம் எடுக்கிறது. தேன்கூட்டைக் கலைத்தவனின் நிலைதான் மத்திய அரசுக்கு. இருந்தாலும் கார்க்கி ஹைதையிலிருந்து கிளம்பிய உடனே இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததில் ஏதும் கனெக்சன் இருக்குமோ?
எந்திரன் - கார்ட்டூன்
32 minutes ago

12 பேரு பாராட்டியிருக்காங்க:
ரொம்ப நாட்களுக்குப் பின் கதம்பம். ரொம்ப நல்லா இருக்கு.
ஆதி : :))))
கார்க்கி : இப்ப எனக்கு தமிழ் நாட்டைப் பற்றி தான் கவலை. அவன் வந்த நேரம்...
அனுஜன்யா
ஆதி.. ;-)))
அனுஜன்யா said...
கார்க்கி : இப்ப எனக்கு தமிழ் நாட்டைப் பற்றி தான் கவலை. அவன் வந்த நேரம்...\\\\
ஆனாலும் ரெம்பத்தான் ஓட்டுறீங்க... யூத்துக்கு போட்டியா கார்க்கி இருப்பதாலா அங்கிள்??
ஆதி...கார்க்கி...கேபிள்...
இன்னும் கொஞ்சம்....
கதம்பம்....கெமிஸ்ட்ரி சரியில்லை..ஹி.ஹி.
நானும் நர்சிம்மை உடனே அழைத்துப் பேசினேன்.
அண்ணாச்சி..
இந்தப் பதிவுல லே அவுட் ஏன் அவுட்டாய்டுச்சி?
கலாய்க்கிற மூடுல இருந்துருக்கீங்க :)
Vijay also has films like kaadhalukku mariyaathai , poove unakkaga.
We should not compare Vijay with Kamal.
We should compare vijay with Rajni
கதம்பத்தில் நண்பர் ஆதியை கலாய்ச்சது ரொம்ப பிடிச்சு இருந்தது.
நீங்க சொன்ன மாதிரி விஜய் படங்கள் தேர்ந்தெடுப்பதில் இன்னும் கொஞ்சம் கவனம் காட்ட வேண்டும்.. கூட இருப்பவர்கள் உசுப்பேத்தி விடுகின்றனர் என நினைக்கின்றேன்.
மிக அழகாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்...
உங்களக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..
நன்றி யூத். கார்க்கி வந்ததால்தான் ராமதாசு அமைதியாகிட்டாரு.
நன்றி ஜின்னா.
நன்றி கும்க்கி
நன்றி பரிசல்.
நன்றி குப்பன். உங்க ஒப்பீடு தவறு. ரஜினியை அவமானப் படுத்த இதைவிட வேறு தேவையில்லை. நல்ல வேளை கிரி இதைப் படிக்க வில்லை.
நன்றி ராகவன்.
நன்றி கமலேஷ்
நல்லாயிருந்தது. நம்பளைக்கலாய்ச்சா எவ்ளோ பேருக்கு மகிழ்ச்சி பாருங்களேன்.. ஹிஹி!!
Post a Comment