Tuesday, August 25, 2009

பழங்குடி ஓவியங்கள் - காந்திராஜன்

நமது முன்னோர்கள் அதாங்க பழங்குடிகள் வரைந்த ஓவியங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆண், பெண் மற்றும் விலங்கினங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறியீடு வைத்து வரைந்திருக்கிறார்கள். இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா?

இருக்குங்க. தென் தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களிலும் அதே சமயத்தில் வரையப்பட்ட தென்னாப்ரிக்கப் பழங்குடிகள் வரைந்த ஓவியங்களும் கிட்டத்தட்ட ஒரே சாயலையும் ஒரே குறியீடுகளையும் கொண்டிருக்கிறது. எந்த வித தகவல் தொடர்பு வசதிகளுமற்று இருந்தகாலத்தில் இந்த ஒற்றுமை ஆச்சர்யகரமானது.


இவ்வித பழங்குடி ஓவியங்களை மீட்டெடுப்பதில் இந்தியாவில் ஈடுபட்டுள்ள மூவருள் தமிழகத்தைச் சேர்ந்த காந்திராஜன் முக்கியமான் ஆளுமை. அவர் இதுவரை தேடியெடுத்த ஓவியங்களைப் பார்வைக்கு வைக்கிறார். ஆகஸ்ட் 27 முதல் நடக்கவிருக்கும் மதுரை புத்தகக் கண்காட்சியில் இவற்றைப் பார்வையிடலாம்.



இது குறித்து நரன் எனக்கு அனுப்பிய மடல்

இந்தியமரபு ஓவியமீட்டெடுப்பின் மிக முக்கிய ஆளுமை K.T.காந்திராஜன் .
ஓவியர் , கலை வரலாற்று ஆய்வாளர்,தொல்பொருள் கண்டறிவாளர்.
இந்தியாவின் மலைபகுதிகளிலும் , கோவில் நகரங்களிலும் ,குகை புறங்களிலும் சுற்றி அலைந்து அங்கிருக்கும் சுவரோவியங்களையும் , பாறை ஓவியங்களையும் ,ஆதி பழங்குடி ஓவியங்களையும் , நிறைய மீட்டெடுப்பு செய்திருக்கிறார் .

அவற்றை ஒரு குறும்படமாகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் .தற்பொழுது
மதுரையில் நடக்கவிருக்கும் புத்தக கண்காட்சி வளாகத்தில் "நான் மாட கூடல் " அரங்கில் அவரின் ஒருங்கிணைப்பில் புகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி நடக்கவிருக்கிறது .

தமிழ் ஓவியம் மற்றும் மரபு சூழலில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும் .
அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள் .

தொடர்புக்கு

K.T.காந்திராஜன்-9840166590


தகவலுக்கு நன்றி நரன்.


.

12 பேரு பாராட்டியிருக்காங்க:

தண்டோரா ...... said...

நான் மதுரை வரும் திட்டம் இருக்கிறது.நீங்கள் வருகிறீர்களா?

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

இராகவன் நைஜிரியா said...

நன்றி அண்ணாச்சி... பழங்குடி ஓவியங்களை ஆராய்ச்சி செய்ய நிறைய பொருமையும், அனுபவமும் தேவை. நண்பர் காந்திராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

நாஞ்சில் நாதம் said...

காந்திராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
:)))

பித்தன் said...

காந்திராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

SanjaiGandhi said...

திரு.காந்திராஜனுக்கு வாழ்த்துகள்.

இரா.சிவக்குமரன் said...

நண்பர் காந்திராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்..

D.R.Ashok said...

தமிழகமே ஆப்ரிக்காவிலிருந்து பிய்த்து கடல்வழி நகர்ந்த துண்டு என்று சொல்கேள்வி! அதலால் தான் நாம் கேரளா, கர்நாடகா, மற்றும் வட இந்தியர்களைவிட கொஞ்சம்! கருப்பாய் இருக்கிறோம் என்றும் சொல்கேள்வி தெரிந்தவர் விளக்கவும்.

காந்திராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

லவ்டேல் மேடி said...

நல்ல பதிவு ....!!

மாசிலா said...

காந்திராஜனின் முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

கும்க்கி said...

ஆக மொத்தம்., கண்டங்கள் ஆதியில் உடைந்து பிரிந்து வந்ததற்க்கான ஆதாரங்கள் பலமாகவே உள்ளது தெரிகிறது.

பின்னோக்கி said...

அருமையான ஆர்வத்தை தூண்டக்கூடிய முயற்சி. சென்னையில் அவர் கண்காட்சி நடத்தினால் சொல்லுங்களேன்