
கை மீறிச் சென்ற காரியங்களின்
எதிர்மறை விளைவுகள்
துக்கம் கவியச் செய்கின்றன
பெருமழைக்கு முன்னான
கருமேகம் போல்
வார்த்தைகளின் கூர்மையில்
காயம்பட்டுச்
சிந்தும் ரத்தத்துளிகள்
வரைகின்றன
யாருக்கும் புரியாத ஓவியங்களை
என்றாலும்
கடந்து செல்பவளின்
இடுப்புக் குழந்தை
கண்விரிய சிரித்த
கையசைப்பிலும்
குறுகலான சந்தில்
ஸ்கூட்டியில் எதிர்ப்படும்
பெண்ணின் குழப்ப முகபாவங்களும்
குறுகுறுப்புடன் சொல்லும் சாரியும்
சைடு ஸ்டாண்ட் போட்ட பைக்கின்
கண்ணாடியில் தலை சீவும்
ஒற்றைக்கால் இளஞனின்
சந்தோஷமும்
என
வேறொரு உலகமும் விரிகிறது
நம்பிக்கைக்கும்
அவநம்பிக்கைக்கும்
இடையேயான
ஊசலாட்டமாகக்
கடக்கிறது வாழக்கை.
.

20 பேரு பாராட்டியிருக்காங்க:
யதார்த்தங்களுடன் பிணைந்து உறவாடுகிறது இக்கவிதை...
சைடு ஸ்டாண்ட் இளைஞர்களைப் புன்சிரிப்புடன் கடக்கிறேன்!!
நல்லா இருக்கு வேலன். எனக்குப் பிடிச்சிருக்கு.
அனுஜன்யா
கைமீறி செல்லும் காரியங்களின் விளைவுகள் எதிர்மறையாகத்தானே இருக்கும்.பின் எதிர்மறை என்ற வார்த்தை அனாவசியம்தானே..
(ஜ்யோவ்ராம்சுந்தர் இப்படித்தான் கேப்பாரு??)
மிஸ்டர். தண்டோர..
சும்மாவே இருக்க மாட்டீங்களா...?
அண்ணாச்சி, கவிதை நல்லாருக்கு.
மிஸ்டர். தண்டோர..
சும்மாவே இருக்க மாட்டீங்களா...?
அண்ணாச்சி, கவிதை நல்லாருக்கு/
தம்பி டக்ளஸ் நீ ஜியோவுக்கு தமிழ் வாத்தியாரா?
//கண்விரிய சிரித்த
கையசைப்பிலும்//
//குறுகுறுப்புடன் சொல்லும் சாரியும்//
ஆகா... இதயத்தை வருடும் வரிகள்
ஊசலாட்டம்தாங்க.
//நம்பிக்கைக்கும்
அவநம்பிக்கைக்கும்
இடையேயான
ஊசலாட்டமாகக்
கடக்கிறது வாழக்கை//
நண்பா,
உங்களை படித்து தொடர ஆரம்பித்திருக்கிறேன்... யதர்த்தமாய், எளிமையாய், ஏற்புடையதாய் இருக்கிறது.
கலக்குங்கள்...
பிரபாகர்.
அருமை அண்ணாச்சி
கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணாச்சி.
அருமை,மிகவும் ரசிக்கும் படியான கவிதை அண்ணாச்சி.
அன்றாட நிகழ்வுகளை கவிதையாக்கும் உங்களின் கவி பார்வைக்கு ஒரு ராயல் சல்யூட்.
kavithai nalla irukku. rasiththeen
mankuthiray
யதார்த்தமாய் ஒரு கவிதை வேலன் அண்ணா அருமை
//.. ஊசலாட்டமாகக்
கடக்கிறது வாழக்கை. ..//
:-)
:-(
அட்டகாசம்
படிச்சவுடனே
பளீர்னு புரியுது! ஒருவேளை இது கவித இல்லையோ???
:)
நல்லா இருக்கு
நிதர்சனத்தை சொல்கிறது
யதார்த்தமா அழகா இருக்குங்க கவிதை...
//நம்பிக்கைக்கும்
அவநம்பிக்கைக்கும்
இடையேயான
ஊசலாட்டமாகக்
கடக்கிறது வாழக்கை.///
நிதர்சனமான உண்மை....
nice
//வார்த்தைகளின் கூர்மையில் காயம் பட்டுச்சிந்தும் ரத்த துளிகள்//திடுக்கிடுகிறது.கவிதை ரொம்ப நல்லா வந்திருக்கு வேலன்.
Post a Comment