Thursday, August 20, 2009

கதம்பம் - 20-08-09



இரு சக்கர வாகனங்களில் ஒரு குடும்பமே பயணம் செய்கையில் மனம் பதைபதைக்கும் அதிலும் பின் சீட்டில் கடைசியாக இருக்கும் பெண் (பெரும்பாலும் குடும்பத்தலைவி) பாதி சீட்டிலும் மீதிக் கம்பியிலும் அமர்ந்து சாகசம் செய்வது பயமுறுத்தும். சற்றுப் பருமனான பெண்மணிகளின் நிலை வருத்தமுறச் செய்யும்.

அடர்மழை பெய்யும் நாளொன்றில் நான் கண்ட காட்சி இது. இரண்டாவதாக அமர்ந்திருக்கும் பெண்மணியின் இருகைகளிலும் தூக்க முடியாத அளவுக்கு பைகளை வைத்துக் கொண்டு எந்தப் பிடிமானமும் இல்லமல் பயணிப்பதைப் பாருங்கள். எதற்கிந்த சாகசம்?

************************************************************************************

வாராந்திர இதழ்களைப் படிக்கும்போது சில விஷயங்கள் சட்டென மனதில் பதிந்துவிடும். அப்படிப் படித்த ஒன்று இங்கே.






**********************************************************************************

மனிகண்டன் சென்னையிலிருக்கும் மென்பொருள் வல்லுனர். மெரினாக் கடற்கரையில் நண்பர்கள் சிலருடன் மாதம் ஒரு நாள் கூடி நல்ல கவிதைகள் படிக்கிறார்கள். அவர் எழுதியதில் இது எனக்குப் பிடித்த ஒன்று




***********************************************************************************

பயணங்கள் எபோதும் தன்னுள் ஆச்சர்யத்தைப் பொதிந்து வைத்திருக்கும். கற்றுக்கொள்ள விஷயங்களைக் கல்பதருவாகத் தந்தவண்ணமே இருக்கும். அப்படியான ஒரு மும்பை நோக்கிய பயணத்தில் எடுத்த படம் இது. பெற்றோர் இருவருக்கும் வயது 45 க்கு மேல் இருக்கும். சிகிட்சை மேற்கொண்டு பிறந்த குழந்தை. குழந்தையின் கண்களைப் பாருங்கள். என்ன ஒரு எக்ஸ்பிரஸிவ் கண்கள்.




*************************************************************************************
அவள் விகடனில் சில சமயம் நல்ல கவிதைகள் வரும்.




************************************************************************************

பிரபல பதிவரின் அக்காள் மகள் இந்தக் குழந்தை. யாரெண்று தெரிகிறதா? கண்களைப் பார்த்தால் சொல்லி விடலாம்.



மருதமலையில் மொட்டையடித்தபின் சூப்பராகக் கொடுத்த போஸ் இது.



***********************************************************************************

பரிசல்காரனின் பெயர்க்காரணம் புரிகிறதா?

கிரி வீட்டுத் திண்ணையில் அமர்ந்து படகோட்டும்போது கிளிக்கியது

டிஸ்கி : எல்லாமே என்னுடைய K750i செல் போனில் எடுத்த படங்கள். பிக்காஸோவில் கொஞ்சம் நகாசு வேலைகள் செய்திருக்கிறேன். எழுத ஒன்றும் மேட்டர் இல்லை என்றால் இப்படித்தான் பெரிய எடுத்தாளர்(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) ஆகணும்.
.







30 பேரு பாராட்டியிருக்காங்க:

सुREஷ் कुMAர் said...

//
அடர்மழை பெய்யும் நாளொன்றில் நான் கண்ட காட்சி இது. இரண்டாவதாக அமர்ந்திருக்கும் பெண்மணியின் இருகைகளிலும் தூக்க முடியாத அளவுக்கு பைகளை வைத்துக் கொண்டு எந்தப் பிடிமானமும் இல்லமல் பயணிப்பதைப் பாருங்கள். எதற்கிந்த சாகசம்?
//
அண்ணாச்சி.. இது நீங்க கார்ல உக்காந்துகிட்டு எடுத்த போட்டோவா..

கொட்டுறமழைல அந்த அம்முனி கொழந்த குட்டிங்களோட சீக்கிரம் போய் சேரனும்ல (வீட்டுக்கு).. அதான் அவசரம்..

அத்திரி said...

கதம்பம் முழுவதும் கவிதைகள் அருமை

மங்களூர் சிவா said...

போட்டோ எல்லாம் போட்டு கலக்கல் கதம்பம்
:))

மங்களூர் சிவா said...

அந்த பாப்பா யாரின் அக்கா மகள் தெரியலையே ?

☼ வெயிலான் said...

வண்ணச்செய்திப்பூக்கள் எடுத்தெடுத்து கோர்த்த கதம்பம் மிக அருமை!

தண்டோரா ...... said...

வேலன்..கார் ஓட்டும்போது போன் மட்டுமில்ல..கேமராவையும் ஊஸ் பண்ணக்கூடாது.ஆனா இதுக்கு அது இல்லை..

அப்புறம் “என் குழந்தையும்,உன் குழந்தையும் நம் குழந்தையுடன் விளையாடி கொண்டிருக்கின்றன”எனக்கு பிடிச்ச வரிகள்..

அப்புறம் நேற்று நான் சொன்னதுதான்..சந்திப்போம்..
பட்டறையில்(எழுத்து)

பிரியமுடன்...வசந்த் said...

ஆப்பிள் கவிதை

ரசித்தது ரசனை

போட்டோல எடுத்தது எல்லாம் சேர்த்து ஆல்பம்ன்னு போடுங்க சார்

இராகவன் நைஜிரியா said...

கதம்பம் என்பதே ஒரு அழகு. அதிலும் அண்ணாச்சி தொடுத்த கதம்பம் மிக அழகு.

இரு சக்கர வாகனங்கள் பற்றி நீங்க சொல்லியது மிகச் சரியானது. சென்னையில் 3 பேர் உட்கார்ந்து போவது ரொம்ப சர்வ சாதாரணமாகிவிட்டது. வண்டி ஓட்டும் போதும் வளைந்து நெளிந்து ஓட்டுவதைப் பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

போட்டோக்களுடன் கூடிய வித்தியாசமான கதம்பம் இன்னும் அழகு.! சிறப்பான செய்திகளுடன் வழக்கம்போல சிறப்பாகத்தான் உள்ளது, நீங்கள் சொல்வது போல எழுத ஒன்றுமில்லாததைப்போல தெரியவில்லை.

பித்தன் said...

Velan u can use Adobbe photoshop which can be used more interactively for expressing ur photo features.

u can get a cracked version of this. And can be learned by urself

T.V.Radhakrishnan said...

கவிதைகள் அருமை

வடுவூர் குமார் said...

மணிகண்டனின் கவிதை தான் எனக்கு பிடிச்சிருக்கு.

என். உலகநாதன் said...

இரு சக்கர வாகன மேட்டர் அருமை.

அது எப்படி யாரோட படத்தையோ எடுத்து அவங்க அனுமதி இல்லாம ப்ளாக்ல போடலாம்?

இது தப்பு இல்லையா?

நம்ம படத்தையோ நம்ம வீட்டுல உள்ளவங்க படத்தையோ போட்டா நாம சும்மா விடுவோமா?

சும்மா கேட்கணும்னு தோணுச்சு, அதான் கேட்டேன்.

என். உலகநாதன் said...

யாரோட படமோனு நான் சொன்னது இரு சக்கர வாகன அம்மணி படத்தை.

லவ்டேல் மேடி said...

நல்லாதேன் இருக்குதுங்க தலைவரே.... கதம்பம்.....!!!

வடகரை வேலன் said...

நன்றி சுரேஷ். கொஞ்சம் தவறினாலும் ஒரேடியாப் போயிடலாம் தெரியுமா?. எந்தப் பிடிமானமும் இல்லாமல் இருக்கார் பாருங்க. திடீர்னு பிரேக் போட்டால் பின்னால் விழுவதைத் தவிர்க்க முடியாது.

நன்றி அத்திரி.

நன்றி சிவா.

நன்றி வெயிலான்

நன்றி தண்டோரா.

நன்றி வசந்த்

நன்றி ராகவன்

நன்றி பித்தன். போட்டொஷாப் அலுவலகத்தில் உபயோகிக்கிறோம். எனக்கு பிக்காசா பிடிச்சிருக்கு. எளிய செயல்பாடுகள்.

நன்றி TVRK சார்

நன்றி குமார்.

நன்றி உலகனாதன். அதுனாலதான் படத்தை ஸ்பாட் க்ளோ பண்ணி விபரங்களை மறைத்திருக்கிறேன். செய்திதான் முக்கியம்.

புலிகேசி said...

ரொம்ப நல்லருக்கு

Cable Sankar said...

எடுத்தாளர் அண்ணாச்சி வாழ்க..

எம்.எம்.அப்துல்லா said...

எடுத்தாளும் எழுத்தாளர் வேலன் அண்ணன் வாழ்க

:)

பரிசல்காரன் said...

அண்ணாச்சி

நிஜம்ம்மாகவே ஸ்பெஷல் கதம்பம். சரியான ஐடியா!

முதல் மேட்டருக்கும், கடைசி மேட்டருக்கும் ஒரு மெலிதான தொடர்பு இருந்ததை ரசித்தேன்!

பரிசல்காரன் said...

ஹரிணிப்பாப்பாவுக்கு நானும் ஒரு காதலன்!

நாஞ்சில் நாதம் said...

கதம்பம் அருமை.

எடுத்தாள்பவர் - எழுத்தாளர்

:)))

நாடோடி இலக்கியன் said...

கதம்பத்தில் எல்லாக் கவிதைகளுமே அருமை.மணிகண்டனின் கவிதை அருமையிலும் அருமை.

கதம்பம் வாசம் தூக்குது அண்ணாச்சி.

திகழ்மிளிர் said...

கவிதைகள் அருமை

yaazini said...

mazai payanam payamuruthudhu.....

ஸ்ரீமதி said...

கதம்பம் அருமை அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

படங்கள் மிக அருமை... :)) பிரபல பதிவரின்(யார்??!!) அக்காள் குழந்தை வாவ் சூப்பர்.. :))

வடகரை வேலன் said...

நன்றி புலிகேசி
நன்றி சங்கர்
நன்றி அப்துல்லா
நன்றி பரிசல்
நன்றி நாஞ்சில்
நன்றி நாடோடி
நன்றி திகழ்மிளிர்
நன்றி யாழினி
நன்றி ஸ்ரீ

செல்வேந்திரன் said...

ரைட்டு!

பட்டிக்காட்டான்.. said...

கதம்பத்தில் கவிதைகள் அருமை..

புகைப்படங்களும்.. ஹி.. ஹி..