சென்ற பதிவில் நெல்லைக் கண்ணன் கவிதை ஒன்றைப் பின்னூட்டமாக இட்டிருக்கிறார் பரிசல்.
தமிழ்க்கடவுள்
முருகன் கோவிலில்
நீண்ட வரிசை
ஜனவரி 1.
இதில் ஏதும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. காலண்டர் வருடம் ஜனவரி 1 ல் தொடங்குவதைத்தானே காலகாலமாகக் கடைபிடித்து வருகிறோம்? அன்று வருடத்தின் முதல்நாள் எனவே செண்டிமெண்டாகக் கோவிலுக்குப் போவது சரிதானே?
கோடை விடுமுறை கழிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தை, முதள் நாள் உடை, ஷீ, பேக், புத்தகம், பேனா என புதியனவாக, ஒரு உற்சாகத்துடன் செல்லுவது போலத்தான் இதுவும்.
மேலும் இந்தியர்கள் மொழியால் பிரிக்கப்பட்டிருக்கின்ற வேளையில், தமிழ்ப் புத்தாண்டு, தெலுங்குப் புத்தாண்டு, மலையாளப் புத்தாண்டு போன்றவை வேறு வேறு தேதியில் வருகின்றன. இந்தியா முழுமைக்குமான ஒரு புத்தாண்டு என்பது இதுதானே, வேறென்ன செய்ய?
என்னுடைய வாடிக்கையாளர்கள், சென்னை, பெங்களூரு, கொச்சி மற்றும் மும்பையில் இருக்கின்றனர். என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு ஒரே நாளில் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்ல.
புத்தாண்டு பற்றிய போஸ்டர் ஒன்று ஈரோடு முழுவதும் ஒட்டப்பட்டிருக்கிறது கீழ்க்கண்ட வாசகத்துடன்.
”மானமுள்ள தமிழா, தை முதல் நாள்தான் புத்தாண்டு”
தை முதல் நாள்தான் புத்தாண்டு தொடங்குகிறதா இல்லையா என்பதைத் தள்ளி வைத்து விட்டு, ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதில் என்ன தீமை என்று யாராவது சொல்லுங்கள். குடி கும்மாளம்தான் கொண்டாட்டம் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அது தவிர்த்து இதைக் கொண்டாட வேறு வழியிருக்கிறது. குறைந்த பட்சம், வாழ்த்துச் சொல்லி இனிப்புப் பரிமாறிக் கொள்ளத் தடை ஒன்றுமில்லையே?
சில தீர்மானங்களை எடுக்கவும் ( அதை கடைபிடிக்கிறோமா என்பது வேறு) அன்று நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து வாழ்த்துச் சொல்லவும் மற்றுமுமொரு சந்தர்ப்பம். ஆனால் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று சொல்லும் தகுதி யாருக்கு இருக்கிறது.
பெயருக்கு முன் இனிசியல் ஆங்கிலத்தில்தான் போடுகிறோம்.
கேக் வெட்டித்த் பிறந்த நாள் கொண்டாடுகின்றோம்.
பேண்ட் சர்ட் அணிந்துதான் தமிழை வளர்க்கின்றோம்.
ஆங்கிலத் தேதியில்தான் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றோம்.
தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கும் காலண்டர் எதுவும் இல்லை.
தமிழக அரசு ஊழியர்களுக்கான டயரி ஆங்கிலப் புத்தாண்டுக்குத்தான்.
அரசாங்கக் கலண்டர்கள் ஆங்கில புத்தாண்டுக்குத்தான்.
ஜனவரி முதல் டிசம்பர் வரைதான் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை நாட்கள்கணக்கிடப்படுகின்றன.
ஜனவரி 1 ஐ அரசே புத்தாண்டு தினம் என விடுமுறை அளித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, தை முதல்நாளைப் பொங்கலாகக் கொண்டாடும் விதமாக உழவர்கள் வாழ்க்கை இருக்கிறதாவெனில் இல்லை என்பதே நிதர்சனம்.
உழவன்
அறுவடை செய்து
பொங்கல் வைத்தது
அந்தக் காலம்
அவனே
ரேசன் கடைக்
க்யூவில் நின்று
பொங்கல் வைப்பது
கஷ்டகாலம்.
டிஸ்கி : தமிழ்ப் புத்தாண்டு அன்று HAPPY NEW YEAR ன்னு ஆங்கிலத்துல வாழ்த்துச் சொல்லுவது நகைமுரண் இல்லையா?
எந்திரன் - கார்ட்டூன்
44 minutes ago

