Wednesday, July 30, 2008

நகைச்சுவைங்க - 2

ஒரு சிறுவன் சிறுநீர் கழித்துக் கொடிருந்தான்.

அந்தப் பக்கமா வந்த பெரியவரு, “ தம்பி இங்கெல்லாம் சிறுநீர் போகக்கூடாதுப்பா, போலீஸ் வந்தா பிடிச்சுட்டுப் போய்டுவாங்க” ன்னாரு

“சும்மா கீழ போறதுதான வேனும்னா பிடிச்சுக்கிடட்டுமே” ன்னா நம்ப பையன்.


வடிவேலு ஒரு மிலிட்டரி ஹோட்டலுக்குப் போகிறார் அங்கு சர்வராக இருப்பவர் பார்திபன்.

வடிவேலு(நக்கலாக) : ஏம்பா மூளை இருக்கா?

பார்த்திபன் : இவ்வளவு நேரம் வந்தவங்களுக்கு இருந்திச்சு.

வடிவேலு : அவ்வ்வ்வ்வ்வ்


மாருதி டீலரிடம் சென்று சர்தார் புதுக் கார் பற்றிய தகவல்கள் சேகரிக்கிறார். உற்சாகமான சேல்ஸ்மேன் ”சார் ஒரு ட்ரையல் பாருங்களேன்” என்கிறார்.

சர்தார் சென்று வெகுநேரமாகியும் வரவில்லை. அவரது மொபைலில் அழைத்துக் கேட்டபோது சொன்னார், “ முன்னாடி போறதுக்கு 5 கியர் வைச்சவன், பின்னாடி வர ஒரு கியர்தான் வைத்திருக்கிறான், வர நேரமாகும்”.

பத்த வைச்சுட்டியே பரட்ட (அல்லது) ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி


பரிசல் தொடங்கி வச்ச இந்தத் தொடர் கோவி மூலமா எனக்கு வந்திருக்கு. இருவருக்கும் நன்றி.

பரிசல் புகைபடத்தப் பத்தி எழுதிக் கலக்கிட்டார். லக்கியும் கோவியும் முதல் காதல்னு பிரிச்சு மேஞ்சுட்டாங்க. நாம எழுத என்ன இருக்குன்னு யோசிச்சப்ப ஏன் நம்ம முதல் முதலா புகை பிடிச்ச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த( அடக்கி வாசி) சம்பவத்த எழுதக்கூடாதுன்னு தோனுச்சு.

அப்ப எனக்கு 12 வயசு இருக்கும், 7 வது வகுப்பு. V K மில்ஸ் குவார்டர்ஸ்ல குடியிருந்தோம்.

நானு, இளங்கோ, ராஜ சேகர், ஜெயபால், பொன்னுச்சாமி எல்லாம் ஒரு செட்டு. சனி ஞாயிறு விடுமுறையில அடிக்கிற கொட்டம் தாங்க முடியாது. நைட் ஷிப்ட் பாத்தவங்களோட பகல் தூக்கத்தக் கெடுக்காம இருக்க, வீட்ட விட்டு எங்களத் துரத்துரதுல பெரியவங்க குறியா இருப்பாங்க.

குவார்ட்டர்ஸ் கம்பி வேலியத் தாண்டிப் போனா விவசாய நிலம். அதில் நிறையக் கிணறுகள் இருக்கும். சிலதில் தான் குளிக்க முடியும். பாறைக்கிணறு அவற்றுள் ஒன்று. வீட்டிலிருந்து சற்று தள்ளியிருந்தாலும், நீச்சல் தெரி்யாதவர்கள் நின்று குளிக்கவும் வசதியாக இருக்கும்.

ஒரு சனிக்கிழமை எங்க செட்டுப் பசங்க எல்லாம் குளிக்கப் போறதுன்னு முடிவாச்சு. அதில இளங்கோ கொஞ்சம் விவ(கா)ரமான பையன். அவங்க அப்பா (போலிஸ் ராமசாமி) குடிக்கும் கத்திரி சிகரெட் (scissors) இரண்டை எப்படியோ எடுத்து வந்துவிட்டன்; கூடவே தீப்பெட்டியும்.

கம்பிவேலி தாண்டி வயக்காடு வழியாகச் செல்ல வேண்டும். ஒரு வரப்பு சற்று உயரமாக இருக்கும். அதன் மறைவில் அமர்ந்து பற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். காற்று, அனுபவமின்மை, முதல் முறை பதட்டம், யாரும் பார்த்துருவாங்களோன்ற பயம் எல்லாம் சேர்ந்து ஒரே தடுமாற்றம்.

ஆறேழு குச்சிகளுக்குப் பிறகு, இரு முறை கை சுட்டுக் கொண்டு, ஒருத்தன் முடியை லேசாத் தீய வச்சு, ஒரு வழியாப் பற்ற வைத்து இழுத்தால் ஒரே காட்டம். ஏன்னா, பில்டர் இல்லாத சிகரெட்தான் அப்போ வரும்

கடைசியாக் குடிச்ச(?) ஜெயபாலன், “இந்தக் கருமத்த எப்படிடா உங்க அப்பா குடிக்கிறாரு?” ன்னு கேட்டுக் கடுப்பாகி தூக்கி வீசீட்டான்.

வாங்கடா போலாம்னு கிணத்துக்கு நடையக் கட்டுனோம்.

கிணத்துல ஒரே அலப்பர, டைவ் அடிக்கிறது, பேக் டைவ் அடிக்கிறது, குட்டிக் கரணம் அடிக்கிறதுன்னு. பம்புசெட்டு ரூம் மேல இருந்து டைவ் அடிக்கலாம்னு மேல ஏறிப் பாத்தா, நாங்க உக்காந்து சிகரெட் குடிச்சதுக்குப் பக்கத்துல ஒரு வைக்கோல் போர் கபகபன்னு எரிஞ்சிட்ருக்கு. பகீர்னுச்சு.

அப்ப வந்த ஒருத்தரக் கேட்டோம், “என்னங்க அங்க தீ எரியுது?”

”எவன் வச்சதுன்னு தெரியல, செட்டியாரு கைல சிக்கினா இன்னக்கிச் சட்னிதான்” னாரு.

சத்தம் போடாம 5 பேரும் அக்ரஹாரத்துக்கு நடந்து, அங்கிருந்து பஸ் ஏறி வீட்டுக்குப் போனோம்.

அப்புறம் டிப்ளமோ முடிச்சுட்டு பனாமா சிகரெட் கம்பெனியிலயே சுப்பர்வைசர் வேலை பாத்தது தனிக் கதை.

டிஸ்கி 1 : மெஸேஜ் இல்லன்னு யாரும் சொல்லப்படாது. வேணும்னா ”அடிக்காம விட்ட பாம்பும் அணைக்காம விட்ட சிகரெட்டும் டேஞ்ஜர்” -னு வச்சுக்குங்க.

டிஸ்கி 2 : படத்துல இருக்க வாசகம் தெரிஞ்சுக்க ஆசைன்னா படத்து மேல 'கிலி'க்குங்க.

டிஸ்கி 3 : ஊக்கமுள்ளோருக்குப் பரம திருப்தி - சிசர்ஸ் சிகரெட் விளம்பரம் (For men of action, satisfaction - SCISSORS). சுப்பிரமணியபுரம் படத்துலகூட இந்த விளம்பரம் வந்துச்சு.

மேலும் தொடர டெல்லியிலிருந்து முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களை வேண்டுகிறேன்.

Wednesday, July 23, 2008

லேப்டாப் கிடைத்திருக்குமா?


மும்பைக்கு 6.00 மணி ஜெயந்தி ஜனதாவில் திடீர்ப் பயனம். வண்டி காலியாக இருந்ததால் பர்த் சுலபமாகக் கிடைத்தது. S11 கோச்சில் மொத்தம் 10 பேர்தான் இருந்திருப்போம். மற்றவர்கள் சேலத்தில் ஏறி திருப்பதிவரை வருவார்கள் என TTE மூலம் தெரிய வந்தது.

எதிர் சீட்டில் தனது லேப்டாப்பில் டைப்பிக்கொண்டிருந்தவருடன்(23-25 வயது) பேச்சுக் கொடுத்ததில் கோவையில் ஒரு எஞ்ஜினியரிங் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் சொந்த ஊருக்குப்(குண்டக்கல்) போவதாகவும் சொன்னார்.

வண்டி இருகூர் தாண்டியிருக்கும், இரு இளம் பெண்கள், தெலுங்கில் மாட்லாடிக்கொண்டே நடை பயின்றனர். இவர் அவர்களை கவனிப்பதை உறுதி செயது கொண்டதும், அருகில் வந்து “நீங்கள் தெலுங்கா?” என்றனர் தெலுங்கில். எதிராள் உற்சாகமாக மாட்லாடத் தொடங்கினார்.

இருவரும் கோவையில் கல்லூரியில் படிப்பதாகவும், இரண்டு நாள் அவசர வேலையாக ரேனிகுண்டா (சொந்த ஊர்) போவதாகவும், இருவருக்கும் வேறு வேறு கோச்சில்(s1 & s4) பர்த் கிடைத்ததால் TTE இடம் சொல்லி மாற்றித்தர இவரது உதவி வேண்டும் என்று கூறினர். இவரும் சம்மதித்து, லேப்டாப்பை மேல் பர்த்தில் வைத்துவிட்டு அவர்களுடன் கிளம்பினார்.

திருப்பூர் தாண்டி, ஊத்துக்குளியும் வந்துவிட்டது தலைவரைக் காணவில்லை. சரி கடலையைத் தொடர்கிறார் என்று இருந்துவிட்டேன்.

வழக்கம்போல் ஈரோட்டில் 20 நிமிடங்கள் நின்றது. கிளம்புவதற்கான சிக்னல் விழுந்ததும், இருவரில் ஒரு பெண்மணி வந்து, “எங்க மூனு பேருக்கும் S1 ல பர்த் மாத்தி வாங்கீட்டோம். அவங்க ரெண்டு பேரும் சாப்பாடு வாங்குறாங்க. அவரோட பேக்க எடுத்துட்டு வரச் சொன்னார்” என்றார். மேல் பர்த்தில் இருந்த லேப்டாப்பை எடுக்க உதவினேன். போனால் போகிறதென்று ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போனார்.

வண்டி கிளம்பிச் சற்று வேகமெடுத்ததும் வந்தார். ”ஈரோட்ல TTE மாறுனாரு, அவர்ட்டச் சொல்லி அவங்க ரெண்டுபேருக்கும் இங்க பர்த் மாத்தி வாங்கீட்டு வாரேன்”, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “ரெண்டு பேரையும் எங்கே?” என்றார்.

“என்னங்க S1ல மூனுபேருக்கும் இடம் கிடைச்சுருச்சுன்னு, ஒல்லியா இருந்த பெண் உங்க பேக்க எடுத்துட்டு அங்க வந்துச்சே?”

சேலம் வரும்வரைக்கும் S1க்கும் S11க்குமாக அலைந்தார். சேலத்தில் ரயில்வே புகார் போலீசில் கொடுக்கச் சொன்னேன்.

வேலை செய்யும் கம்பெனியின் புது பிராஜக்ட் பற்றிய டேட்டா முழுவதும் போய்விட்டது, வேறு பேக்கப்பும் இல்லை என்பதுதான் அவரது மிகப்பெரிய இழப்பு.

லேப்டாப் கிடைத்திருக்குமா?


Monday, July 14, 2008

கோவை வலைப் பதிவர் மீட்டிங்


சந்திப்புன்னு போனா மீட்டிங் நடத்துதாவ. ஒருத்தரு பேசுதாரு எல்லாரும் கேக்காவ. அதத்தாம் பதிவுல பண்ணுதமே? பின்ன இதுக்கு இம்புட்டுக் கஷ்டப்படனுமா?

ஏதோ முகந்தெரியாம எழுதிக்கிட்டுருக்கமே நேர்லயும்தாங் கொஞ்சம் பாத்துப் பழகுவமேன்னு போனா செமினார் மாதிரி நடத்துதாக.

நான் போனப்ப நம்ம சுப்பையா சார்வாள் பேசிக்கிட்டுருந்தாவ. என்னப் பாத்ததும், யாருன்னு சொன்னதும், ”வாங்க உங்க பதிவெல்லாம் படிச்சிருக்கேன்னாக” நமக்கு எல்லா எடமும் குளுந்துட்டு.

அடுத்து ஒருத்தர் வந்தாரு. சார்வாள் அவரப் பாத்தும் அதயே சொன்னாக. சே மோசம்லா போய்ட்டமுன்னு ஆயிட்டுது.

நான்ஸ்டாப்பா சார்வாள் பேசுதத பாத்ததும் எனக்கு கொசுவத்தி சுத்தீருச்சு
“ அடுத்த பந்தை வாலாஜா முனையிலிருந்து அளவான, சீரான வேகமெடுத்து, வீசும் கை விக்கெட்டின் மேல் வர வீசினார். அளவு சற்றுக் குறைவாக ஆப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்து, முன் காலிலே சென்று அதை ஓங்கி அடித்தார், தடுப்பதற்கு யாருமில்லை. அது அவருக்கு நான்கு ரன்களைப் பெற்றுத்தருகிறது. இத்துடன் அவரது சொந்த எண்ணிக்கை 60 அணியின் மொத்த எண்ணிக்கை 320. அடுத்த பந்து....”

அடுத்து ஞானவெட்டியான்னு எங்க பெரியப்பா கணக்கா ஒருத்தரு பேசுனாரு.
அவுக வாத்தியாரு அவுகள வெட்டிப்பயல்னு கூப்பிட்டாக, மாபோசி அவுகள ஞானவெட்டியான்னு பட்டப்பேரு வச்சுக்கூப்பிட்டாகன்னாரு.

அவுக இப்பத்தாம் கோயாமுத்தூருக்கு வந்திருக்காக இன்னங் கொஞ்ச நாள்ல பதிவெல்லாம் போட ஆரம்பிச்சுடுவாக. ஆரம்பிச்சாகண்டா ஒரு நாளைக்குப் பத்திலருந்து பானைஞ்சு பதிவு போடுவம்னாக. சரிதாம் ஒன்னு போடங்கியல இங்க அவனவன் தண்ணி குடிக்காம்.

அடுத்ததா பால் ஜோசப் (ஜோசப் பால்ராஜ்-னு நல்லா கும்மியடிச்சு அவரக் குழப்பீட்டாக), சொன்னதுல ஒரு விசயம் முக்கியமானது, .tk-னு ஒரு செர்வர்ல ப்ரீயா இடம் கொடுக்காம்லா அது பித்தலாட்டம்னது. யாரும் உங்க பிளாக்க அவசரப்பட்டு மாத்த வேண்டாம்னாக.

அடுத்து நம்ம மீசைக்கார லதானந்த் அண்ணாச்சி பேசினாக. நா தமிழ சாக்கி போட்டுத் தூக்க வரல. ஏதோ எழுதுனா, நாலு பேரு சந்தோஷப்படுவாகன்னா மொக்க போடலாம் தப்பில்லன்னாக.

அடுத்து ஓசை செல்லா தமிழ்மணத்துல இப்பல்லாம் ஒரே மொக்கன்னாக. சரி அம்புட்டுத்தேங் கெளம்புவோம்னு கிளம்பீட்டன் (வீட்டுல உளுந்தம்பருப்புச் சாப்பாடும் கறிக் கொழம்பும் ரெடின்னு SMS வந்ததுதா உண்மையான காரனம்) .

மஞ்சூர் ராசா அவுகளுக்கும், அவுக வீட்லருக்க எல்லாத்துக்கும் ரெம்பப் பெரிய மனசு. ஒறமொறகள பார்த்த மாதிரி ஒரு கொற இல்லாமப் பாத்துக்கிட்டாக.

சூடா வடை கொடுத்தாக, குலோப் சாமூனு கொடுத்தாக, சாக்கிலேட்டுக் கொடுத்தாக, சர்பத்து கொடுத்தாக, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதமெல்லாம் கொடுத்தாக. சாப்பிட்ட எலய அவுக எடுத்தது மனச ரெம்பக் கஷ்டப்படுத்துச்சு.

சஞ்சய் தம்பீ சுத்தி சுத்தி வேல பாத்தாக. ரெம்பப் பாசத்தப் பொழிஞ்சாக.

ஆயிரம் இருந்தும் வசதிகளிருந்தும்னு நம்ம ஜிவாசி பாடுவகளே அது மாதிரி ஆயிட்டு.

ஐயா தொரமார்களே அடுத்தாப்ல பதிவர் சந்திப்பு ஏதும் நடத்துற மாதிரி இருந்தா நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க.

1. 10.00 - 4.00 கொஞ்சமில்ல ரெம்பவே சாஸ்தி. ஒரு 3 மனி நேரம் போதும்.

2. ஒரு பொது எடத்துல வைக்கதுதா நல்லது. சிலாவத்தா பேசிப் பழக முடியும். இதென்னமோ ம.ராசா வீட்டு விசேசத்துக்கு போனாப்லதா இருக்கு.

3. மீட்டிங்கு மாதிரி இருக்குறத கண்டிப்பா தவிர்க்கனும். நாலு பேரும் கலந்துரையாடனும் ஒருத்தரு அத முறைப்படுத்தனும். பேசுற விசயத்தப் பொருத்து அது தானே அமையும்.

4. இடம் நேரம் இதெல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னக்கூட்டியாவது மத்தவங்களுக்கு சொல்லீரனும்.

5. சாப்பிடற ஐட்டமெல்லாம் முக்கியமில்ல. அதை பகிர்ந்து ஜாலியா பேசிச் சிரிக்கிறதுதான் முக்கியம்.

5. குறிப்பா ”இப்பல்லாம் தமிழ்மணத்துல ஒரே குப்ப சாரி மொக்க” ரக கமெண்டுகளத் தவிர்க்கனும்
.

சிங்கப்பூர்லருந்து வந்தாகளே கிரி, அவுகதாம் பாவம். அங்கருந்து கோபிக்கு வந்தவுக நாலு சொந்தபந்தங்களப் பார்த்தமா, பாக்க வேண்டிய மக்க மனுசங்கள பாத்தமான்னு இல்லாம, பஸ் ஏறி கோயாமுத்தூரூ வந்தாக. சிங்கப்பூரூ பதிவர் சந்திப்பு மாரி இருக்குமுன்னு வந்தேம்னாக.

இது எப்பவும் உள்ளதுதான். எதிர்ப்பார்ப்பு அதிகமா இருக்குறப்ப ஏமாத்தமும் அதிகமா இருக்குமுல்லா?

மத்தியானம் என்ன பேசுனாகன்னு யாராவது பதிவு போடுவாகளா?

Thursday, July 10, 2008

சுகன்யா(100/100)வின் மின் அஞசல்

கொஞ்ச நாளைக்கு முன்பு திருப்பூர் மாணவி சுகன்யா 5 பாடத்திலும் 100/100 வாங்கியது பற்றிப் பதிவிட்டிருந்தேன்.

அவருக்கு நான் ஒரு பாரட்டுக் கடிதமும் எழுதி அனுப்பியிருந்தேன்.

அதற்கு அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருகிறது.

Respected Sir /Madam,

I'm Suganya R, student of LRG Govt Arts College For Women, Tirupur. You had sent a congratulating letter to me for getting centum in my university examination. I'm so proud to receive that letter from you.That was a great reward given to me.

Thank you,


அவரைப் பாரட்ட நினைப்பவர்கள் அவரது மின்னஞ்சல் முகவரி வேண்டுமானால், vadakaraivelan@gmail.com என்ற முகவரிக்குத் தனிமடல் அனுப்புங்கள்.

Sunday, July 06, 2008

தாயும் சேயும் நலம்


நான் +1 (1982) சேர்ந்தப்ப 3 குடும்பங்கள் இருந்த காம்பவுண்டுக்குள்ள, நாலாவது குடும்பமா குடிபெயர்ந்தோம்.

அங்க ஒரு பெரிசு, பேரு காமாட்சினாதர், இருந்தார். நல்ல ஆகிருதி, ஆனா வயசாகி உடல் தளர்ந்து விட்டது(75 வயது). ஏற்கனவே அந்த வீதியில இருந்த பசங்க மூலமா அவரப் பத்தி ஒரு இளக்காரமான இமேஜ் மனசில பதிஞ்சுருச்சு, என்ன காரனமுன்னு இது வரைக்கும் தெரியல .(இன்னைக்கும் அத நெனச்சு வருத்தப் படுறேன்)

அவரு நடையும் நம்ம வாஜ்பாய் மாதிரி ஜோக்காத்தாம் இருக்கும். காலையில உடம்பு பூரா பட்ட போட்டுட்டு கோவிலுக்குப் போய் வருவார். வீட்டிலும் வெகு நேரம் பூஜை செய்வார். சொஸைட்டியில கணக்கு எழுதுவார். மகன் வெங்கட் வேலை நிமித்தம் சென்னயில் இருந்தார்.



அவரோட மருமகளுக்கு பிரசவ வலி எடுத்ததும் குதிரை வண்டி ஏற்பாடு செய்யச் சொன்னார். அவரும், மருமகளும், வீட்டு வேலைக்காரப் பெண்மணியும் குதிரை வண்டியிலயும், நான் சைக்கிள்லயும் G H போனோம்.

மருமகளை அட்மிட் செய்துவிட்டு நானும் அவரும் வெளியே திண்டில் அமர்ந்த்திருந்தோம்.

“தம்பி இப்ப அனுவுக்கு பிரசவமாகி, அந்தத் தகவலை எம்பையனுக்குச் சொல்லனும்னா எப்படித் தந்தி அடிக்கிறது?”

”ஏங்க நான் போய் தந்தி ஆபீஸ்ல அடிச்சுட்டு வாரேன்.”

“அட அதுக்கில்லீப்பா, என்ன வாசகம் போடுவே?”

சற்று நேர மெளனத்திற்குப் பிறகு அவரே தொடர்ந்தார்

“தமிழ்ல சொல்லுங்க தம்பி, அப்புறம் ஆங்கிலப் படுத்திக்கலாம்”

“என்ன குழந்தைன்னு தெரியாம எப்படிங்க?”

“சரி இப்போதைக்குப் பையன்னு வச்சுக்குவோம்”

”உங்கள் மனைவிக்கு ஆண் குழந்த்தை பிறந்துள்ளது, தாயும் சேயும் நலம்”

”உங்கள் மனைவிக்குன்னு அடிச்சா, அங்க வேற வெங்கட் இருந்தா குழப்பமாகும்ல, ராதான்னு போடுங்க”

“ராதாவுக்கு ஆண் குழந்த்தை பிறந்துள்ளது, தாயும் சேயும் நலம்“

“சரி இப்ப ஆங்கிலத்துல சொல்லுங்க”

“For Radha boy delivered. Both no danger"

அவரு பார்த்த கேவலமான பார்வை இன்னும் என் மனசுல இருக்கு, மறக்க முடியாது.

அப்புறம் அவருகிட்டயே ஆங்கிலத்த அடிப்படையில இருந்து கத்துக்கிட்டேன். அவர் இறக்கும் வரை அதை சொல்லியே கிண்டலடிப்பார்.

இன்னைக்கி ஒரளவுக்கு இலக்கணப் பிழையில்லாம ஆங்கிலம் பேசுவதும் எழுதுவதும் அவராலதான்.

கேள்வி பதில் - மறு பதிப்பு


கேள்வி
யுதிஷ்ட்ரா,
வாழ்க்கையின்
விசித்திரமெது?

பதில்
வெட்டப்பட்ட குழியில்
வீழ்த்தப்படுமொரு சவம்.

மூட்டப்பட்ட தீயில்
எரிக்கப்படுமொரு உடல்.

எல்லாம் கண்டும்
எல்லாம் கேட்டும்

தானே சாஸ்வதமென
தவறிழைக்கும் மனிதன்.


தமிழ்மணம் இணைப்பில் ஏதோ கோளாறு எனவே மீண்டும் பதிவிட்டிருக்கிறேன்.

நகைச்சு வையுங்க




பையனுக்கு நகச்சுவைன்னா ரெம்பப் புடிக்குமா?
ஏன்
கை சூப்பிட்டே இருக்கானே அதான்.



பொண்டாட்டியக் கூட்டிட்டு ஊட்டி கொடைக்கனல்னு ஜாலியா போலாம்னு பாத்தா முடியல
ஏன்?
இன்னும் கல்யாணம் ஆகல.



கண்டக்டர் வீட்ல பொண்ணு எடுத்தது தப்பாப் போச்சு.
ஏன்?
மீதிச் சீர அப்புறமா வங்கிங்கன்னு பத்திரிக்கை பின்னாடி எழுதிக் கொடுத்திருக்கார்.



SMS-ல வந்த ஜோக் ஒன்னு.

ஒருத்தர் நரகத்துக்கு போனப்ப அங்க Dr.விஜயும் ஒரு பிச்சக்காரப் பெண்ணும் டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க.

ஏன் இந்த தண்டணை இளய தளபதிக்குன்னு கேட்டாரு.

தண்டனை அந்த பெண்ணுக்குன்னு பதில் வந்தது.


அதான் ‘வையுங்க'ன்னு முதல்லயே சொல்லீட்டன். நெல்லைத் தமிழ்ல வையுங்கன்னா திட்டுங்கன்னு அர்த்தம்.

கேள்வி பதில்


கேள்வி
யுதிஷ்ட்ரா,
வாழ்க்கையின்
விசித்திரமெது?

பதில்
வெட்டப்பட்ட குழியில்
வீழ்த்தப்படுமொரு சவம்.

மூட்டப்பட்ட தீயில்
எரிக்கப்படுமொரு உடல்.

எல்லாம் கண்டும்
எல்லாம் கேட்டும்

தானே சாஸ்வதமென
தவறிழைக்கும் மனிதன்.

Saturday, July 05, 2008

விட்டுடுங்க ப்ளீஸ்

ஹலோ அனானி,

நீங்க யாருன்னு எனக்குத் தெரியும்கிறது உங்களுக்குத் தெரியுமான்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கிறதால, இந்தக் கேள்விய உங்ககிட்டயே கேட்டா அதுக்கு உங்க பதில் ஆமாவா இல்லயான்னு யோசிச்சு யோசிச்ச, நீங்க ஆமான்னு சொன்னாலும் இல்லயின்னு சொன்னாலும் அர்த்தம் ஒன்னுதாங்கிறப்ப எதுக்கு கேட்டுகிட்டு பேசாமப் பதிவாவே போட்டுடலாமான்னு நெனைச்சா அதுக்கும் நீங்க பின்னுட்டம் போடுவீங்களா இல்லா போடாமப் போயிருவீங்களான்னு யோசனையா இருக்கிறதாலயும், அப்படியே பதிவாப் போட்டா மத்த பதிவர்கள் எல்லாம் கடுப்பாவங்களா? இல்ல காண்டாவாங்களா? இல்ல எரிச்சலாவாங்களா இல்ல இதெல்லா சேத்தோ தனிதனியாவோ ஆவாங்களான்னு யோசிக்கும்போதே, அப்படித் தனிதனியாவோ இல்ல மொத்தமாவோ ரப்சர் ஆகி ஆட்டோ அனுப்புவாங்களா? இல்ல ஆள் வச்சு அடிப்பாங்களா இல்ல நேர்ல வந்து ஒதப்பாங்களா இல்ல ஒரு பின்னுட்டம் மட்டும் போட்டு தண்ணி தெளிச்சு விட்டுடுவாங்களான்னு எல்லாம் பயமா இருக்கிறதால, தயவு செய்து என்னை விட்டுடுங்கன்னு கேக்க வேண்டிய சூழ்நிலைக்கு என்ன ஆளாக்குனது உங்க வெற்றியா இல்ல என்னோட தோல்வியான்னு புரியாத புதிராக்கி, இந்த உண்மை எல்லாருக்கும் தெரியும்மான்னு கேக்க வச்சுட்டீங்களேன்னு வருத்தப்படும்படி என்ன ஆக்குனது நியாயமான்னெல்லாம் சு.சாமி கேள்வி கேட்ட மாதிரி என்ன கேக்க வச்சுட்டிங்களேன்னு


அடச் சே விட்டுடுங்க ப்ளீஸ்.

Friday, July 04, 2008

சோப்பு வாங்கலியோ சோப்பு

பொள்ளாச்சில இறங்கி, ஓம் ப்ரகாஷ் ஸ்டாப்புக்கு டிக்கட் வாங்கியாச்சு. கண்டக்டர்கிட்டயும் 3 தடவ சொல்லியாச்சு, ஸ்டாப்பிங் வந்ததும் சொல்லுங்கன்னு.

இறங்கி கடையில விசாரிச்சோம்.

”ஏங்க இங்க சம்பத்துன்னு அவரு வீட்டுக்கு எப்டி போகனுங்க?”

”எந்த சம்பத்து?”

”ஒல்லியா ஓயரம்மா இப்பக்கூட பழனியில வந்து மொட்டை போட்டுருக்காருங்க.”

”அட நம்ம நடராசம் பையன். இந்த சந்துல போயி கடைசீல திரும்புங்க 3 ஆவது வீடு. கண்டுபிடிக்க முடியிலனா திரும்பி வாங்க கடைப் பையன அனுப்ச்சாப் போச்சு.”

இருந்தது, முன்புறம் இரண்டு அசோக மரங்கள், வீட்டிற்கு நல்ல தோற்றம் உருவாக்கியிருந்தது. காம்பெள்ண்டில் இருந்த பெல்லை அடித்தோம்.

“யாரு?” கேட்டுக் கொண்டே வந்த சம்பத்துக்கு 21 வயதிருக்கும். நாச்சிமுத்துவில் டிப்ளமா டெக்ஸ்டைல் படித்து விட்டு, நல்லுரில் ஒரு மில்லில் ஷிப்ட் சூப்பர்வைசர் வேலை.

“பழனிலருந்து ராசாக்கண்ணு அனுப்சாப்ல”

“வாங்க வாங்க”

பின்தொடர்ந்தோம்.

அமரச்சொல்லி உள்ளே போனவர் ஒரு சொம்பில் தண்ணீரும் ஒரு கிளாசும் எடுத்து வந்தார். சொம்பை வாங்கி அப்படியே குடித்தேன்.

”சொல்லுங்க”

”இது அறிவழகன், அறிவுன்னு கூப்பிடுவோம் இவன் காரியம்மாத்தான் வந்தோம். ராசா விவரமாச் சொன்னாப்லயா?”

“மேலோட்டமாத்தான் சொன்னாப்ல”

“கொஞ்சம் வெளிய போலாமா”

சங்கோசத்தைப் புரிந்து கொண்டு தலையாட்டியபடியே சென்று சட்டையணிந்து வந்தான்.

டீ ஸ்டாலில் இருந்த ஓர பெஞ்சில் மூவரும் அமர்ந்தோம்.

“சொல்லுங்க”

“நம்ம அறிவு, மேகலான்னு எங்க வீதில இருக்க பொண்ணோட பழகினாப்ல. படிப்பு முடிஞ்சதும் (BA - Indian Culture, 3rd Year) கல்யாணம் செஞ்சுக்கிற ஐடியால இருக்காப்ல. அதுக்குள்ள அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சு கொஞ்சம் ரப்சராயிருச்சு.”

“சரி”

“புள்ளய அவஙக் சித்தப்பா வீட்டுக்கு அனுப்ச்சுட்டாங்க. இங்கதாம் பொள்ளாச்சி டு கோயமுத்தூர் ரோட்டுலருந்து உள்ளாற 5 மைல் போகனும். போய்ப்பாக்கலாம்னா, அது இருக்க வீடு தோட்டத்துக்குள்ள இருக்கு. ஊருலருந்து தள்ளி இருக்கு. தனி ரோடு அவங்க தோட்டத்துக்கு மட்டும் போகுது. இவனென்னடான்னா பாத்தே ஆகனும்னு, சாப்டக்கூட மாட்டெங்றாப்ல”

”அது கொஞ்சம் பிரச்சனையான ஊராச்சே. கிராமத்துல தும்முன்னாக்கூட உள்ளூராந்தும்மல், வெளியூராந்தும்மல்னு சட்னு சொல்லீருவாங்க. கொஞ்சம் கஷ்டந்தான்”

”ஒரு அரைமணி நேரம் இங்கன தாக்காட்டீட்டு இருங்க. நம்ம பிரண்டப் பாத்து யோசன கேக்கலாம்”

“சரி”

சம்பத் பிரண்டுடன் வந்த்தான். ஆளப்பாத்ததும் கம்யூனிஸ்டா இருப்பாரோன்னு இருந்த சந்தேகம், ”வாங்க தோழரே” ன்ன உடனே உறுதியாச்சு.

”சம்பத் எல்லாஞ் சொன்னாப்ல, எனக்கு ஒரு ஐடியா இருக்கு வொர்க் அவுட் ஆகுமான்னு பாக்கலாம்”

வொர்க் அவுட் ஆகும் போலத்தானிருந்தது, இத விட்டா வேற வழியுமில்ல.

4 பேரும் பஸ் பிடித்து சந்தைப் பேட்டைக்கு வந்தோம். அங்கு தோழர் கணேசனைத்தேடிப் பிடித்து எல்லா விபரமும் சொல்லி, தோழரோட ஐடியாவச்சொல்லி அவரு உதவி கேட்டோம்.

“என்ன மாட்டி விடாம இருந்தாச் சரி”

நானும் சம்பத்தும் மட்டும் போவது என்றும், தோழர் பலருக்கும் தெரிந்தவர் என்பதாலும், அறிவு சம்பந்தபட்டவன் என்பதாலும் தவிர்க்க வேண்டியாகிவிட்டது.

ஆளுக்கு ஒரு சைக்கிள். கேரியரில் சோப்புப்பெட்டி, பெட்டி நிறைய சோப்புக் கட்டிகள், கலெக்‌ஷன் பை- முழு சேல்ஸ் மேனாக்கிவிட்டார்.

“தம்பி எந்த சமயத்துலயும் சந்தேகம் வராம நடந்துக்குங்க. யாரவது ஏடாகூடமாகக் கேள்வி கேட்டா நா புதுசு ஒங்க கேள்விக்கு, அடுத்த தடவை வரும் போது சீனியரக் கூட்டிட்டு வந்து பதில் சொல்றன்னு பவ்யமாச் சொல்லுங்க. காரியம் பெரிசா வீரியம் பெரிசான்னு கவுத்துடாதீங்க. நாங்க கோயமுத்தூர் ரோட்ல காத்திட்டுருக்கோம்”

சைக்கிள்ல வந்து சேல்ஸ் பன்றவங்களை கிண்டல் பன்னதுல்லாம் ஞாபகம் வந்துச்சு. சரி நண்பனுக்காக் இது கூடவா செய்யமுடியாதுன்னுட்டு கிளம்பீட்டோம்.

சோப்பு வித்தோமா, மேகலாவப் பாத்தோமா-ன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கீங்க.


அதுக்கு முன்னாடி ஒரு சிறு விளம்பர இடைவேளை.


“வாங்குங்க வாங்குங்க சாந்தி சோப். 3 வாங்குன்னா 1 ப்ரீ, 5 வாங்குன்னா 2 ப்ரீ. குறந்த செலவில் நிறந்த சலவை”